கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 5, 2018

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)


இதே தலைப்பில் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறேன். அதை பார்க்க முடியாதவர்களுக்காக இந்த உரை நடை:

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா? என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. எங்கேயோ தவற விட்ட ஒன்றை அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் தேடுவதைத்தான் இப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டாலும், எவ்வளவுதான் வடிகட்டிய முட்டாளாக இருந்தாலும், இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று ஒரு சந்தேகமும், அப்படியானால் அர்த்தமே இல்லாமல் ஒரு சொலவடை வருமா? என்றும் கேள்விகள் புறப்படுகின்றன, இதற்கு விடை தெரிய வேண்டுமானால் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை சரிதத்தை புரட்டிப் பார்க்க வேண்டும்.

சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும்  அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நிற்கும் பொழுது, இறைவனும், இறைவியும்  வயது முதிர்ந்த தம்பதியினராக வந்து சுந்தரரை விருத்தாச்சலம் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கிருக்கும் சிவபெருமான் மீது பாடல்கள் பாடிய சுந்தரருக்கு சிவபெருமான் பதினையாயிரம் தங்க கட்டிகளை வழங்குகிறார். அவற்றை தனியாகச் செல்லும் தான் எப்படி எடுத்துச் செல்வது என்று தயங்கிய சுந்தரர், சிவபெருமானிடம், "இந்த தங்க கட்டிகளை நான் இங்கு ஓடும் திருமணிமுக்தா நதியில் போடுகிறேன், அவைகளை திருவாரூரில் இருக்கும் கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அதற்கு ஒப்புக்கொள்ள அவரளித்த பதினையாயிரம் தங்க கட்டிகளில் அடையாளமிட்டு திருமணிமுக்தா நதியில் போட்டு விடுகிறார். 

திருவாரூருக்கு திரும்பிச் சென்ற, சுந்தரர் தன் மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் இந்த விஷயத்தை கூறி, அவரையும் கமலாலயத்திற்கு அழைக்கிறார். அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவருடன் செல்கிறார் பரவை நாச்சியார். திருவாரூர் தியாகேசனையும், அங்கிருக்கும் விநாயகரையும்  வணங்கி, கமலாலயம் குளத்தில் மூழ்கி தான் மணிமுக்தா ஆற்றில் போட்ட தங்க கட்டிகளை தேடுகிறார், அவருக்கு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி தேடுகிறார், அப்போதும் கிட்டவில்லை, இதைப்பார்த்த பரவை நாச்சியார்,"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்று கேலியாக நகைத்தாராம். உடனே சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சிவபெருமானிடம்,"என் மனைவி என்னை கேலி செய்யும்படி வைத்து விட்டாயே இறைவா, இது சரியில்லை, எனக்கு அந்த பொற்கட்டிகளை தந்தருள வேண்டும்" என்று வேண்ட, அவர் மணிமுக்தா ஆற்றில் இட்ட தங்க கட்டிகள்  திருவாரூர் கமலாலயம் குளத்தில் அவருக்கு கிட்டின. நமக்கு ஒரு சொலவடையும் கிட்டியது.    



Sunday, December 2, 2018

Bhavani Patti Talks - ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?

2.0 (விமர்சனம்)



2.0
(விமர்சனம்


Image result for enthiran 2


என்னத்த விமர்சனம் எழுதுவது?

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காம்பினேஷன், 600 கோடி பட்ஜெட், மூன்று வருடங்கள் தயாரிப்பு, 3D தொழில்நுட்பம் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் படம். இதில் தொழில் நுட்பம் மட்டுமே ஏமாற்றமளிக்கவில்லை. 

கதாநாயகி இல்லை, இனிமையான பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை, வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லை, முக்கியமாக கதை இல்லை. மொத்தத்தில் ஷங்கர் படம் தரும் திருப்தியில்லை.