கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 26, 2021

தி.ஜானகிராமன் நூற்றாண்டு.

தி.ஜானகிராமன் நூற்றாண்டு. 




இந்த வருடம் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. அவருடைய பல படைப்புகளை படித்து ரசித்திருக்கிறேன். மோகமுள் படித்த பொழுது இந்தக் கதையை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே என் மூச்சு பிரிய வேண்டும் என்று தோன்றியது. கும்பகோணத்தில் பிறந்து,  டில்லியில் வாழ்ந்தவர். 

தஞ்சை ஜில்லாவை சேர்ந்தவராக இருந்தாலோ என்னவோ இவருக்கு காவிரி மீது ஒரு தனி காதல் உண்டு.  இவருடைய எல்லா கதைகளிலும் காவிரி ஓடும். இவருடைய எல்லா கதாநாயகிகளும் காவிரியைப் போலவே அழகாகவும், கம்பீமாகவும் இருப்பார்கள்.

நம் நாட்டில் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை, கானடாவிலிருந்து வெளிவரும்  'இலக்கிய வெளி' என்னும் தமிழ் பத்திரிகை தி.ஜானகிராமன் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அதில் அவருடைய மகள் அவரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. 



 







இலக்கிய வெளி ஆசிரியர் திரு. அகில் அவர்களுக்கு நன்றி.