கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label போதிசத்துவர். Show all posts
Showing posts with label போதிசத்துவர். Show all posts

Tuesday, June 24, 2025

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் (Wutai Shan Buddhist Garden) - Part 2

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் 

(Wutai Shan Buddhist Garden) - Part 2


North Platform, South Platform, East Platform என்று வெவ்வேறு இடங்களில் பெரிய பெரிய மஞ்சுஸ்ரீ போதிஸ்ட்துவர்களின் சிலைகள். ஒண்று கையில் சுவடி ஏந்தி, இன்னொன்று சிம்ம வாகனத்தில் கையில் வாள் ஏந்தி, மற்றொன்று கையில் வில்லும் அம்பும் ஏந்தி, நமக்கு சரஸ்வதி, துர்கையை நினைவு படுத்தினாலும் இவர்கள் அந்த போதிசத்துவர்கள் எல்லாம் ஆண்கள் என்கிறார்கள்.

முதல் படத்தில் ஏறிச் செல்ல படிகள் இன்னும் கட்டப்படவில்லை


அந்த சிலைகளின் பிரும்மாண்டம், அழகு, முகத்தில் தவழும் கருணை.. அப்பப்பா..! பார்க்க பார்க்க மனசுக்குள் ஒரு விவரிக்க இயலாத அமைதி பிறக்கிறது. எல்லாமே கொஞ்சம் படிகள் ஏறித்தான் தரிசிக்க வேண்டும்.

எல்லா போதிசத்துவர்கள் முன்னாலும் வெண்ணிற சலவைக் கற்கள். அதில் முழங்கால் பட அமர்ந்து பீரார்திக்க வேண்டும். செருப்பு அணிந்திருக்கலாம். கீழே இருக்கூம் படத்தில் பிரார்த்தனை செய்யும் பெண்.

 


நடுவில் மத்திய பிரார்த்தனை கூடம் என்பதில் மூன்று பிரும்மாண்ட புத்தர் சிலைகள் பொன் மேனியராக, கருணை தவழும் முகத்தோடு அமரந்த கோலத்தில் பார்க்க முடிகிறது. மூன்று புத்தர்களும் கையில் வெவ்வேறு பொருள்களை ஏந்தியிருக்கின்றனர். 





அதைத்தவிர அந்த கூடத்தை சுற்றி வரும்பொழுது நிறைய புத்தர் சிலைகள், எல்லாம் வெவ்வேறு முத்திரைகள். பக்தர்கள் தட்டு தட்டாக பழங்கள், பூங்கொத்துகளை காணிக்கையாக படைத்திருக்கிறார்கள். அவற்றை அங்கேயே விற்பனை செய்கிறார்கள். இது அமைந்திருப்பது முதல் தளத்தில். 

இங்கே புத்தரை தரிசனம் செய்யும் பொழுது மணி ஒசை கேட்டுக் கொண்டே இருந்தது. கீழே இறங்கியதும் அந்த மணி ஓசை எங்கிருந்து வருகிறது என்பது தெரிந்தது.







கீழே அமர்ந்திருக்கும் புத்தருக்கு மேலே மரத்தடியில் அமர்ந்திருக்கும் வயதான புத்தருக்கு பழங்கள் கொண்டு தரும் விலங்குகளும், தேவதைகளும்

கீழ் தளத்தில் உணவு விடுதி இருக்கிறது. அங்கே நாங்கள் மல்லிகை டீ குடித்ததை ஏற்கனவே எழுதி விட்டேன். இங்கேயும் மத்தியில் ஒரு பெரிய ஹாலில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் விக்கிரகங்கள். அந்த ஹாலின் சுவர் முழுவதும் வரிசையாக மரசட்டத்தில் புத்தர் படங்கள். அவை பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அது நிறைவேறியதும் வாங்கி மாட்டுவதாம். 


இதற்கும் கீழே கார் பார்க்கிங். அங்கு ஒரு ஓரத்தில் பெரிய மணி ஒன்று இருக்கிறது. நாம் ஏதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், அந்த  விருப்பம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த மணியை அடித்தால் நாம் ஆசைப்பட்டது நடக்குமாம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவரின் கோவிலில் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று இடைவிடாமல் மணி ஒலிக்கிறது. :))



விஸ்டம் லேக் தாண்டி தொலைவில் தெரிவது விஷ் ஃபுல்ஃபில்லிங் செவன் பகோடாஸ்


ஒரு போதிசத்துவரின் சன்னதியைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபங்களில் ஒன்று. இவை ஞான பாதையில் புத்தருக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் அவருடைய போதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, அங்கேயே கையோடு கொண்டு போயிருந்த உணவை சாப்பிட்டோம். பின்னர் கீழே இறங்கி, விஸ்டம் லேக், லைஃப் லிபரேஷன் பாண்ட், விஷ் ஃபுல்ஃபில்லிங் செவென் பகோடாஸ் முதலியவற்றை பார்த்துவிட்டு, வீடு திரும்பினோம். 

நாங்கள் சென்ற அன்று நல்ல குளிர், கோடையில் ஒரு நாள் செல்ல வேண்டும்.

Monday, June 9, 2025

உடாய் ஷான் புத்தியிஸ்ட் கார்டன்(Wutai Shan Buddhist Garden)

உடாய் ஷான் புத்தியிஸ்ட் கார்டன்(Wutai Shan Buddhist Garden)


மைத்ரேய புத்தா:

என் மகள் வீட்டிலிருந்து அரைமணி நேர டிரைவ் தொலைவில் ஒரு புத்தர் கோயில் புதிதாக வந்திருக்கிறது, அங்கு செல்லலாம் என்று என் மகளின் குடும்ப நண்பர் கூறினார். சென்ற மாதம் வந்த லாங் வீக் எண்டில் போக நினைத்தோம். ஆனால் மழை எங்கள் திட்டத்தை நிறைவேற்ற விடவில்லை.  சென்ற வாரம் சனியன்று அங்கு போக திட்டமிட்டோம். மழை இல்லை, ஆனால் மேக மூட்டம் மற்றும் காற்று.. நல்ல குளிர்.

நுழை வாயில்

நாம் புத்தர் கோவில் என்று சொன்னாலும், அதை Wutai Shan Buddhist garden  என்கிறார்கள். 350 ஏக்கரில் விரிந்து பரந்திருக்கும் இந்த இடத்தை North Platform Manjusri Bodhisattva, West Platform Manjusri Bodhisattva, Central Platform Manjusri Bodhisttva, South Platform Manjusri Bodhisttva, East Platform Manjusri Bodhisttva ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள்.   

நுழைவு வாயிலின் இரு புறங்களிலும் பக்கத்திற்கு 14 என்று மொத்தம் 28 தூண்கள் அல்லது ஸ்தூபங்கள் உள்ளன. அவற்றை wish fulfilling stoopas என்கிறார்கள். அங்கிருந்து வலது பக்கத்தில் கார் பார்கிங்க்.  வண்டிகளை நிறுத்தி விட்டு, முதலில் பிருமாண்டமான ஹாப்பி புத்தாவை( laughing Buddha)  தரிசிக்கச் சென்றோம். அவரை மைத்ரேய புத்தா என்கிறார்கள்.

பதிமூன்று அடி உயரத்தில், 700 டன் எடையுள்ள (தலை மட்டுமே 27 டன்னாம்) ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த மைத்ரேய புத்தா சிலைதான் வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சிலையாம். இது இங்கு நிறுவப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

கனடா புத்த விஹார தலவரான டாய் ஷி(Dayi Shi) 2009 ஆம் ஆண்டின் கோடையில் ஒரு நாள் அப்பொழுது உருவாகிக் கொண்டிருந்த உடாய் ஷான் தோட்டத்தை பார்வையிட்டுவிட்டு, அவர் இருந்த சாம் ஷான் புத்தர் கோவிலுக்கு திரும்பியவுடன் அசதியில் உறங்கி விட்டார். உறக்கத்தில் ஒரு கனவு. "எத்தனையோ போதிசத்துவர்கள் இருக்க, நாலு போதிசத்துவர்களுக்கு மட்டும்தான் கோவிலில் இடமா? மைத்ரேய போதிசத்துவர் என்ன ஆனார்?" என்று குரல் கேட்டது, அதோடு மைத்ரேய புத்தரின் உருவ சிலையும் தெரிந்தது. விழித்துக் கொண்டு விட்டார். உடனே மைத்ரேய போதிசத்துவரின் சிலையை உடாய் ஷான் தோட்டத்தில் நிறுவ முடிவு செய்தார். 

அந்த தோட்டத்தின் விஸ்தீரணத்திற்கு ஏற்ப பிருமாண்ட சிலையை நிறுவினால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.  ஆனால் அதில் இரண்டு பிரச்சனைகள் இருந்தன. ஒன்று அவர் விரும்பியபடி சிலை அமைக்கத் தேவையான நிதி, இரண்டாவது அந்த சிலையின் உருவ அமைப்பு. அவர் முடிவு செய்த இரண்டாவது நாளே ஹாங்காங்கிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த ஷெங்க் என்னும் பக்தர் சிலைக்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

அடுத்ததாக சிலையின் உருவ அமைப்பு குறித்து அவருடைய தேடல் துவங்கியது. அவர் பார்த்த எந்த சிலையும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அப்போது சைனாவிலிருந்து வந்த ஒருவர் தன்னிடம் மைத்ரேய புத்தரின் வெண்கல சிலை ஒன்று இருப்பதாகவும் அதை டாய் வந்து பார்க்கலாம் என்றும் கூறினார். சைனா சென்று பார்த்த டாய் அவர்களுக்கு ஆச்சர்யம். ஏனென்றால் அவருடைய கனவில் வந்த ஒருவத்தை அப்படியே ஒத்திருந்தது அந்த சிலை.  அந்த சிலையை அடிப்படையாகக் கொண்டே உடாய் ஷான் தோட்டத்து சிலை வடிக்கப்பட்டது.

மைத்ரேய புத்தரின் அமைப்பை பார்க்கலாம்: அவருடைய தோள்வரை தொங்கும் நீண்ட காது அளப்பறிய ஆசிர்வாதத்தை குறிக்கிறது, அவருடைய பருத்த தொந்தி வளமையையும், கருணையையும் குறிகிறது. வலது முழங்காலை தொட்டுக் கொண்டிருக்கும் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு மூட்டை நிறைய ஆசிகளையும் வைத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் அறுகோண ஆசனம் போதிசத்துவராக மாற கைகொள்ள வேண்டிய ஆறு பயிற்ச்சிகளை குறிக்கிறாதாம். அறுகோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் முக்தியடைந்த புத்தமதம் புகட்டும் நெறிகளை கடைபிடித்து முக்தி அடைந்த ஐநூறு மகாங்களின் உருவங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. 

மைத்ரேய புத்தருக்கு எதிரே தரையில் மூன்று பெரிய சதுரக் கற்கள் சற்றே சாய்ந்த வாக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது. 'இதன் மீது கால் வைக்காதீர்கள்' என்ற அறிவிப்பு. அதில் முழங்கால் படிய அமர்ந்து பிரார்த்த்னை செய்ய வேண்டுமாம். அங்கிருக்கும் ஒரு கடையில் பிரார்த்தனை பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதி முக்கியமானது விஷ்ஷிங்க் கார்ட்ஸ் என்பவை. 

Wishing cards

கட்டப்பட்டிருக்கும் கோரிக்கை அட்டைகள்

இந்த விஷ்ஷிங் கார்ட்ஸில்(wishing cards) நம்முடைய கோரிக்கைகளை எழுதி, அதை மைத்ரேய புத்தருக்கு முன் இருக்கும் சதுர கல்லில் வைத்து பிரார்த்தித்து, பின்னர் மைத்ரேய புத்தரை மூன்று முறை வலம் வந்து அங்கு சுற்றியிருக்கும் கம்பியில் கட்டி விட வேண்டும். அந்த கோவிலின் பூஜாரி ஒரு மாதத்திற்கு நமக்காக பிரார்த்தனை செய்து கொள்வாராம். நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறுமாம். 

உமாமகேஸ்வரி மேடம் படிப்பார்கள்



சிரிக்கும் புத்தருக்கு முன் சிரிக்காத நான் குளிர்  - சிரிக்க முடியவில்லை


- தொடரும்