கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 29, 2022

நியாயம்

 நியாயம்


கீர்த்திக்கு அலுப்பாக இருந்தது. சிங்க் முழுவதும் பாத்திரங்கள். வந்திருந்த விருந்தினர்கள் சென்றாகி விட்டது. இப்போது பாத்திரங்கள் அத்தனையையும் தேய்த்து, துடைத்து வைத்து விட்டு படுக்கைக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆகி விடும். 

"இதை அப்படியே போட்டுவிட்டு படுத்துக் கொள். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றான்" ராஜீவ். 

"அப்படியே போட்டுவிட்டு வந்தால் கரப்பு வந்து விடும்".

"சரி அப்போ நான் தேய்க்கிறேன், நீ அலம்பி துடைத்து விடு" என்று ராஜீவ் பாத்திரங்களை துலக்கத் தொடங்கினான். வேலை சீக்கிரம் முடிந்ததில் இருவரும் சீக்கிரம் படுக்கைக்குச் செல்ல முடிந்தது. 

ராஜீவ் அப்படித்தான். "நாளைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை டின்னருக்கு கூப்பிடலாமா? உனக்கு ஓ.கே.தானே? என்று அவளின் சௌகரியத்தை அனுசரிக்கும் அக்மார்க் அமெரிக்க ஆண்மகன். அதோடு அவளுக்கு கறிகாய்கள் நறுக்கி கொடுப்பது போன்ற  உதவிகளும் செய்வான்.

எல்லா பெண்களையும் போல கீர்த்தியும் திருமணமாகி அமெரிக்கா செல்லப் போகிறோம் என்பதில் த்ரில்லிங்காக உணர்ந்தாள். அங்கு சென்றதும் தான் அந்த ஊரின் சில அசௌகரியங்கள் புரிந்தன. இந்தியா போல வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆட்கள் வைத்துக் கொள்வது காஸ்ட்லி சமாச்சாரம். அவர்களே தான் எல்லாம் செய்து கொள்ள வேண்டும். 

அவர்கள் இருந்த அபார்ட்மெண்டில் டிஷ் வாஷர் இல்லை. வாஷிங் மெஷினும் கீழே லாண்ட்ரி ரூம் என்பதில் மொத்தம் எட்டு மெஷின்களும், எட்டு ட்ரையர்களும்  இருந்தன. இவர்கள் வாரம் ஒரு முறை துணிகளை அங்கு சென்று துவைத்து, காய வைத்து எடுத்து வருவார்கள். அதற்கும் சில சமயங்களில் ராஜீவ் செல்வான். அதைப்போல வீட்டை அவள் பெருக்கினால், ராஜீவ் மாப் போட்டு விடுவான். 

திருமணத்திற்கு முன்பு வரை கீர்த்தி சமையல் ஓரளவிற்கு செய்வாளே தவிர வீட்டு வேலைகள் செய்து பழக்கமில்லை. அவளை விட இரண்டே வயது மூத்தவளான அவளுடைய அண்ணிக்கு கூட திருமணமாகி வந்த பொழுது வீட்டு வேலைகள் தெரியாமல்தான் இருந்தது. கீர்த்தியின் அம்மா மருமகளை ஒரே வருடத்தில்  நன்றாக பயிற்றுவித்து விட்டாள். மகன் வீட்டு வேலைகள் செய்வது கீர்த்தி யின் அம்மா, அப்பா இரண்டு பேருக்குமே பிடிக்காது. ராஜீவ் தனக்கு வீட்டு வேலைகளில் உதவுவதை அம்மாவிடம் சொன்ன பொழுது பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள்.

ஒரு நாள் ராஜீவ் மாப் போடுவதையும், பாத்திரம் துலக்குவதையும் செல்ஃபோனில் படமெடுத்து, தங்களுடைய குடும்ப வாட்ஸாப் க்ரூப் பில் கீர்த்தி பகிர்ந்து கொண்ட பொழுது யாரும் எந்த கருத்தும் அனுப்பவில்லை. அன்று இரவு அவளுடைய அப்பா அவளுக்கு தனியாக கீழ்க்கண்ட மெஸேஜ் அனுப்பியிருந்தார்.

" உனக்கு மூளை இருக்கிறதா இல்லையா? உன் அண்ணியை நீயே தூண்டி விடுகிறாயா?