கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 28, 2018

சாரதே சாரதே ஞான தாயினே


சாரதே சாரதே ஞான தாயினே


"ஒரே ஒரு குழந்தை உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?, உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?" என்று பரமஹம்சர் கேட்க, இரண்டாவதை தேர்ந்தெடுத்து உலகத்திற்கே அன்னையான ஶ்ரீ சாரதா தேவியின் 166வது பிறந்த நாள் இன்று. "யாதேவி சர்வ பூதேஷு மா மாத்ரு ரூபேண சம்ஸ்திதா, நமஸ்தஸ்மை, நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நமஹ"(எந்த தேவியானவள் எல்லா உயிகளிடத்திலும் அன்னை வடிவமாக விளங்குகிறாளோ, அவளை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்) என்று தேவி பாகவதம் துதிக்கிறது. சாரதா தேவியை எல்லா உயிர்களுக்கும் அன்னையானாளோ அவளை வணங்குகிறேன் என்று துதிக்கலாம்.
 'கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகத்தில்' சுஜாதா எப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:




Sunday, December 23, 2018

அன்புள்ளம் கொண்ட எங்கள் ப்ளாக் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். மிக சமீபத்தில்(17.12.18) என் சகோதரியின் கணவர் இறந்து போனார். சில வருடங்களாகவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு க்கொண்டிருந்த அவருக்கு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உடம்பு சரியில்லாமல் போய், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதும், மீண்டு வருவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த முறை ஸ்வைன்  ஃபளூ, நிமோனியாவாக மாறி அவரை வீழ்த்தியது.

இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் இரண்டாவது பெண்ணுக்கு சென்ற மாதம் 25ம் தேதி வந்த காய்ச்சல் விடவேயில்லை. இரண்டு முறை ஒரு பிரபல மருத்துவ மனையில் அனுமதித்தும் அவளுக்கு வந்திருப்பது எந்த வகை காய்ச்சல் என்று சரியாக கண்டு பிடிக்காமல் ஏகப்பட்ட ஆண்டி பயாடிக்ஸ்,  ஸ்டிராய்ட்ஸ் போன்றவை கொடுத்ததால் உடம்பு மிகவும் பலவீனமானதேயொழிய காய்ச்சல் விடவேயில்லை. பிறகு தெரிந்தவர்கள் கூறியதன் பேரில் மாம்பலம் ஹெல்த் சென்டரில் அனுமதித்தோம்.  அங்கு மீண்டும் டெஸ்டுகள் எடுத்ததில் லட்சத்தில் 160 பேரை தாக்கும் stills disease  என்று கண்டு பிடித்து இப்பொழுதுதான் ட்ரீட்மெண்ட்  ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இன்னும் காய்ச்சல் வருவது நிற்கவில்லை. என் அக்காவுக்கு கணவர் மறைந்த துக்கம் ஒரு புறம், மகளின் உடல் நிலை குறித்த கவலை ஒரு புறம். "இரு கோடுகள் தத்துவம் போல ஆகி விட்டது என் நிலமை" என்கிறாள்.
என் அக்கா பெண்ணின் உடல் பூரண குணமடையவும், என் அக்காவின் மனதிற்கு அமைதி கிடைக்கவும் ப்ரார்த்தனை செய்ய உங்கள் அணைவரையும் வேண்டுகிறேன்.🙏🙏