கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, September 9, 2021

விநாயகரின் பதினாறு பெயர்கள்

 விநாயகரின் பதினாறு பெயர்கள் 


நாம் தொடங்கும் செயல்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டுமென்றால் நாம் வணங்க வேண்டியது விநாயக பெருமானை என்பது எல்லோருக்குமே தெரியும்.  மனித வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களான கல்வி கற்க தொடங்குவது, திருமண வாழ்க்கையை தொடங்குவது, பயணங்களை தொடங்குவது, போர் காலங்கள் போன்ற எல்லா காலங்களிலும் விநாயகரை இந்த சிறப்பான பதினாறு பெயர்களை சொல்லி வணங்கி விட்டு தொடங்கினால் அந்த செயல்கள் எல்லாவற்றிலும் எந்தவித தடங்கல்களும் வராது. 

சுமுகஸ்ச்ச ஏக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக 

லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக 

தூமகேதூர் கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானந 

வக்ரதுண்ட: சூர்ப்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

ஷோடசைச்ச நாமானி ய: படேத் ஸ்ருணுயாதபி 

வித்யாராம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா

ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே   

  • மங்கள முகம் வாய்ந்த சுமுகர், 
  • ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தர், 
  • கபில நிறம் வாய்ந்த கபிலர், 
  • யானைக் காதுகள் உள்ள கஜ கர்ணகர், 
  • பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரர், 
  • குள்ளத் தோற்றமுள்ள விகடர்,  
  • சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்கினராஜர்,  
  • எல்லா விக்கினங்களையும் அழிக்கக்கூடிய விநாயகர் 
  • நெருப்பை போல் ஒளி வீசக்கூடிய தூமகேது, 
  • பூத கணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷர், 
  • நெற்றியில் பிறைச் சந்திரனை சூடிய பால சந்திரன், 
  • யானைத் தோற்றமுள்ள கஜானனர், 
  • வளைந்த தும்பிக்கையை கொண்ட வக்கிரதுண்டர் 
  • முறம் போன்ற அகலமான காதுகள் கொண்ட சூர்ப்பகர்ணர், 
  • தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு அருள் புரியும் ஹேரம்பர்
  • கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜர் 
  • என்னும் பதினாறு பெயர்களையும் வித்தைகளை கற்க தொடங்கும் பொழுதும்,  
  • வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் போர் காலத்திலும்      
  • யாராவது வாசித்தாலும் அல்லது செவி குளிர கேட்டாலும் அவர்களுக்கு எந்தவித விக்கினங்களும் சம்பவிக்காது. 
இதற்கான விளக்கத்தை என்னுடைய யூ டியூபில் பார்க்கலாம். சுட்டிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன 

https://studio.youtube.com/video/pIMta8SrHBk/edit

https://studio.youtube.com/video/fopb_iPlv-g/edit

https://studio.youtube.com/video/UjV0BIBJLPs/edit

https://studio.youtube.com/video/TS1Hl1RWtYs/edit

https://studio.youtube.com/video/dp9XogvkB7Y/edit




Monday, September 6, 2021

பார்த்தேன், ரசித்தேன்..

 பார்த்தேன், ரசித்தேன்..


கொடைகானலில் சாட்டிலைட் அமைக்கப்பட்டதும் திருச்சியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண முடிந்தது. அப்போதெல்லாம் நேஷனல் கவரேஜில் ஹிந்தி நிகழ்ச்சிகளைத்தான் பார்க்க முடியும். ஹிந்தி திணிக்கப்படுகிறது என்று புலம்பிக் கொண்டே எல்லோரும் அந்நிகழ்ச்சிகளை பார்த்தோம். அப்போது பெரும்பாலும் கருப்பு வெள்ளை டி.வி.தான். ஷட்டர்ஸ் வைத்த சாலிடேர், மற்றும் டயனோரா கோலோச்சிய காலம். சிலர் கிரௌன் டி.வி.கூட வைத்திருந்தார்கள்.  

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு சீரியல் இருக்கும். திங்களன்று பார்த்த நுக்கட், புதனன்று மால்குடி டேஸில் ஆர்.கே. நாராயணனின் ஸ்வாமி அண்ட்  ஹிஸ் பிரெண்ட்ஸ்  புத்தகத்திலிருந்து கதைகள்  வியாழனன்று ஏக் கஹானி என்னும் அருமையான சீரியல். ஒவ்வொரு வியாழனும் இந்திய மொழிகளின் சிறந்த சிறு கதைகள் குறும் படங்களாக்கப் பட்டன. (அப்போது குறும்படம் என்னும் கான்செப்ட்டே கிடையாது. வெள்ளியன்று கர் ஜமாய் என்னும் நகைச்சுவை தொடர். அதைத் தவிர சத்யஜித்ரே இயக்கிய கதைகள். ஒவ்வொரு வாரமும் ஒரு கதை. மிக அருமையாக இருக்கும்.

ஞாயிறன்று காலை 'சீக்ரெட்ஸ் ஆஃப் தி சீ' என்னும் நல்ல, ஆனால் மெதுவாக நகரும் டாகுமெண்டரி. ஞாயிறு இரவு சித்தார்த் பாசு நடத்தும் க்விஸ் எல்லாம் பார்த்திருக்கிறேன். தினசரி இரவில் 'jewel on the crown' என்னும் ஆங்கில சீரியல் ஆங்கிலேயர்களுக்கும், இந்தியர்களுக்கும் இருந்த நல்ல உறவை சித்தரித்த சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை பிரதிபலித்த கதை. 

1987ல் நான் வெளிநாடு சென்று விட இங்கே ரீஜினல் ஒளிபரப்பும் தெரிகிறது என்றார்கள்.  அங்கே செட் டாப் பாக்ஸ் என்னும் விஷயம் வரும் வரை வீடியோ காசெட்தான். ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளை வீடியோ காசெட்டில் பார்த்தோம். செட் டாப் பாக்ஸ் வந்ததும், என் குழந்தைகளோடு சேர்ந்து 'ஸ்மால் ஒண்டெர்' , 'டீன் ஏஜ் மியூடென்ட் நிஞ்சா டர்ட்ல்' போன்றவை களோடு  டெரிக் ஓ ப்ரெய்ன் நடத்திய போர்ன்விடா க்விஸ் கான்டெஸ்ட்டும் தவற விட்டதில்லை. அவர்களோடு சேர்ந்து  கிரேஸி மோகனின் சீரியல்களை அப்போது விரும்பி பார்த்திருக்கிறோம். ரமணி VS ரமணி மிகவும் ரசித்து பார்த்த சீரியல். அந்த நகைச்சுவை, வாசுகியின் நடிப்போடு மறக்க முடியாத சீரியல்.  அதே போல 'வீட்டுக்கு வீடு லூட்டி' என்னும் சீரியலும் சிறப்பான நகைச்சுவை தொடர். அதுவரை சினிமாக்களில் அழுமூஞ்சியாகவே பார்த்திருந்த சரண்யா இதில் நகைச்சுவையில் கலக்கியிருப்பார். 

குழந்தைகள் வளர,வளர அவர்கள் விரும்பி பார்த்த 'ஃபிரண்ட்ஸ்', 'டூ அண்ட் ஹாஃப் மென்' போன்ற சீரியல்களை அவ்வப்பொழுது பார்த்ததுண்டு. 

பின் 1998ல் இந்தியா திரும்பிய பொழுது, மதியம் ஒரு மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட 'சொந்தம்' என்னும் சீரியலை விடாமல் பார்த்தேன். சிவசங்கரியின் கதையான இதில் மௌனிகா  நடித்திருந்தார். எங்கேயாவது வெளியே சென்றால் ஒரு மணிக்குள்  வீடு திரும்ப வேண்டும் என்று மனம் 
பரக்கும்.அல்லது இந்த சீரியல் முடிந்ததும் கிளம்புவேன். "சே! கேவலம் ஒரு சீரியல் நம்மை முடக்குவதா?" என்று தோன்ற சீரியல்களை பார்ப்பதை நிறுத்தினேன்  ஆயினும் வீட்டில் மற்றவர்கள் பார்த்ததால் நானும் சித்தி, அண்ணி,சஹானா போன்ற சீரியல்களை பார்க்க நேர்ந்தது. எனக்கு ராதிகாவின்    நடிப்பு மிகவும் பிடிக்கும்.  தினசரி சீரியங்களில் அவரைப் பார்த்து எங்கேயாவது அவர் நடிப்பு அலுத்து விடப் போகிறது என்பதால் அவர் நடித்த அண்ணாமலை, வாணி,ராணி போன்ற சீரியல்களை பார்ப்பதை தவிர்த்து விட்டேன். 

எனக்கு ஒரு ராசி, நான் ஏதாவது சீரியலை பார்த்தால் அதன் முடிவை பார்க்க முடியாமல் போய் விடும். சமீபத்தில் ரேவதிக்காக அழகு என்னும் சீரியலை பார்த்தேன், அதை அவர்களே நிறுத்தி விட்டார்கள். ஹாஹா! எப்படி என் ராசி?   
--------------------

என்னுடைய சென்ற பதிவில் உணவின் பெயர் கொண்ட உணவகங்களின் பெயர்கள் கேட்டிருந்தேன். நிறைய பேர் அதை சாய்சில் விட்டு விட்டார்கள். எனக்குத் தெரிந்தவற்றை சொல்கிறேன்.
தலப்பாக்கட்டி பிரியாணி 
Coffee day
Chai point
99 Dosa
Pizza hut
Pizza inn
Dominos Pizza
Arun Ice creams
Burger King
முருகன் இட்லி கடை 
மதுரை இட்லி