விநாயகரின் பதினாறு பெயர்கள்
நாம் தொடங்கும் செயல்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டுமென்றால் நாம் வணங்க வேண்டியது விநாயக பெருமானை என்பது எல்லோருக்குமே தெரியும். மனித வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களான கல்வி கற்க தொடங்குவது, திருமண வாழ்க்கையை தொடங்குவது, பயணங்களை தொடங்குவது, போர் காலங்கள் போன்ற எல்லா காலங்களிலும் விநாயகரை இந்த சிறப்பான பதினாறு பெயர்களை சொல்லி வணங்கி விட்டு தொடங்கினால் அந்த செயல்கள் எல்லாவற்றிலும் எந்தவித தடங்கல்களும் வராது.
சுமுகஸ்ச்ச ஏக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக
தூமகேதூர் கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானந
வக்ரதுண்ட: சூர்ப்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
ஷோடசைச்ச நாமானி ய: படேத் ஸ்ருணுயாதபி
வித்யாராம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே
- மங்கள முகம் வாய்ந்த சுமுகர்,
- ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தர்,
- கபில நிறம் வாய்ந்த கபிலர்,
- யானைக் காதுகள் உள்ள கஜ கர்ணகர்,
- பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரர்,
- குள்ளத் தோற்றமுள்ள விகடர்,
- சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்கினராஜர்,
- எல்லா விக்கினங்களையும் அழிக்கக்கூடிய விநாயகர்
- நெருப்பை போல் ஒளி வீசக்கூடிய தூமகேது,
- பூத கணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷர்,
- நெற்றியில் பிறைச் சந்திரனை சூடிய பால சந்திரன்,
- யானைத் தோற்றமுள்ள கஜானனர்,
- வளைந்த தும்பிக்கையை கொண்ட வக்கிரதுண்டர்
- முறம் போன்ற அகலமான காதுகள் கொண்ட சூர்ப்பகர்ணர்,
- தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு அருள் புரியும் ஹேரம்பர்
- கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜர்
- என்னும் பதினாறு பெயர்களையும் வித்தைகளை கற்க தொடங்கும் பொழுதும்,
- வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் போர் காலத்திலும்
- யாராவது வாசித்தாலும் அல்லது செவி குளிர கேட்டாலும் அவர்களுக்கு எந்தவித விக்கினங்களும் சம்பவிக்காது.
https://studio.youtube.com/video/pIMta8SrHBk/edit
https://studio.youtube.com/video/fopb_iPlv-g/edit
https://studio.youtube.com/video/UjV0BIBJLPs/edit
https://studio.youtube.com/video/TS1Hl1RWtYs/edit
https://studio.youtube.com/video/dp9XogvkB7Y/edit