கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 15, 2011

konjam kavithai



 

 
சூடுதான், காய்ந்துவிட்டு போகட்டுமே வெய்யில்
கதவைத் திறந்து வை!
புழுதிதான், வீசிவிட்டு போகட்டுமே காற்று
கதவைத் திறந்து வை!
ஈரம்தான், நனைத்து விட்டு போகட்டுமே மழை
கதவைத் திறந்து வை!
வாடைதான் வீசிவிட்டுப் போகட்டுமே குளிர்
கதவைத் திறந்து வை
தென்றலும் ஒரு நாள் வீசும்
கதவைத் திறந்தே வை!