கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 23, 2014

VI ANNUAL DAY CELEBRATIONS OF SRI VIGNESWARA LADIES CLUB - RAMAPURAM

 VI  ANNUAL DAY CELEBRATIONS OF SRI VIGNESWARA LADIES CLUB - RAMAPURAM 

ராமாபுரத்தில் இருக்கும்  எங்கள் 'விக்னேஸ்வரா லேடிஸ் கிளப்'ன் ஆறாவது ஆண்டு விழாவை 17.6.2014 செவ்வாய் கிழமை அன்று கொண்டாடினோம். இடம் ராமாபுரம் கே.பி. நகர் மாநகராட்சி பூங்கா. விழாவின் முக்கிய நிகழ்ச்சி ராமாபுரம் அரசு உயர் நிலை பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அதைத் தவிர அதே பள்ளியில் பயிலும் ஐம்பது மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும், இரண்டு மாணவர்களுக்கு சீருடையும் வழங்கியதுதான்.

Displaying IMG_0902.JPG
FROM LEFT TO RIGHT: Mrs.Jayanti, Mrs.Bhanumathy,Mrs.Shyamala, Ms.Bargavi Devandra,Mrs.Kanchana,Mrs.Rajalakshmi
மாலை 4:30 க்கு நிகழ்ச்சி துவங்கும் என்று குறிப்பிட்டிருந்தாலும் நான்கு மணி முதலே சங்க உறுப்பினர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். அதன் பிறகு பள்ளிக் குழந்தைகளும் வந்து சேர்ந்தனர். எல்லோருக்கும் சிற்றுண்டியும், காபியும் வழங்கப் பட்டவுடன் நிகழ்சிகள் திருமதி.சுந்தரி அவர்கள் இறை வணக்கம் பாட இனிதே துவங்கின.   வரவேற்புரையை விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் ன் தலைவி திருமதி.சியாமளா வெங்கடராமன் அவர்கள் வாசித்தார்கள். அதன் பிறகு விழாவிற்கு தலைமை தாங்கிய, Tamil Nadu Social Welfare Board இல் இணை இயக்குனராக பணி புரிவதோடு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, விமென்ஸ் இந்தியன் அசோசியேஷன், சி.பி. ராமசாமி ஐயர் பௌண்டேஷன் போன்றவைகளில் சிறப்பு செயலாளராக சேவை புரியும்  MS. பார்கவி தேவேந்திரா அவர்கள் உரையாற்றினார்கள். அவருடைய தோற்றத்தைப் போலவே அவரின் பேச்சும் எளிமையாக இருந்தது. அதன் பிறகு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி. காஞ்சனா அவர்கள் விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் செய்து வரும் சேவைகளை புகழ்ந்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்களுக்கு அறிவுரையும் கூறி ஒரு பெப் டாக் வழங்கினார்.

Displaying IMG_0812.JPG
Gathering of students

Displaying IMG_0792.JPG
 Mrs.Bhanumathy & Mrs. Jayanti compering the evet

Displaying IMG_0889.JPG
Prize distribution

Displaying IMG_0904.JPG
Chief guest with Club members
இதன் பிறகு ராமாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் வேங்கடக்ரிஷனனுக்கு விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் சார்பில் ரூ.1500/- வழங்கப்பட்டது. இந்த மாணவன் 493/500 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளான் என்பது  குறிப்பிடத் தக்கது.  இரண்டாம் மற்றும்
மூன்றாம் இடத்தை பிடித்த விஜய சாந்திக்கும் கீர்த்தனாவுக்கும் முறையே ரூ.1000/-, ரூ.800/- ரொக்க பரிசுகளாக வழங்கப்பட்டன. இதைத் தவிர அறிவியல் படத்தில் 100/100 மதிப்பெண்கள் வாங்கிய ஐஸ்வர்யா என்னும் மாணவிக்கும், பிரகாஷ் என்னும் மாணவனுக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ.100/- வழங்கப் பட்டது.

வேங்கடக்ரிஷ்ணனுக்கு ஒரு ரிஸ்ட்வாட்சினை முதுபெரும் எழுத்தாளரான திருமதி.பத்மா மணி அவர்கள் வழங்கினார்கள். அவனுடைய திறமையை மெச்சி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அவனுடைய +2 படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொண்டு அவனை அங்கேயே அழைத்துக் கொண்டு சென்று விட்டதால் அவனுக்கான பரிசை அவன் தாயார் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பொருளாதாரத்தில் நலிவு அடைந்த நிலையில் உள்ள இரு மாணவர்களுக்கு சீருடையும், ஐம்பது மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப் பட்டன. ஐந்து வருடங்கள் முன்பு இரண்டு குழந்தைகளுக்கு புத்தகம் வழங்குவதோடு ஆரம்பித்த இந்த நல்ல விஷயம் இப்போது ஐம்பது குழந்தைகளுக்கு வழங்குவது வரை வந்திருக்கிறது.  இது மேலும் மேலும் வளரும் என்று நம்புகிறோம்!