கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label sendhil. Show all posts
Showing posts with label sendhil. Show all posts

Wednesday, September 10, 2014

சினிமாவில் வராத கவுண்டமணி செந்தில் காட்சி!

சினிமாவில்  வராத கவுண்டமணி  செந்தில் காட்சி!



கவுண்டமணி: ஏண்டா நாயே! என்னடா சொன்ன என்கிட்ட? சொல்லுவியாடா ? சொல்லுவியாடா? (செந்திலை அடிக்க ஓடுகிறார்)

அண்ணே! ஏன் அண்ணே அவனை அடிக்கிறீங்க?

இந்த நாய் கிட்ட நான் என்ன கேட்டேன்,  இவன் என்ன பண்ணியிருக்கான்? கேளுங்க...

அப்படி என்னப்பா செஞ்ச?  அண்ணன் உன்கிட்ட என்னப்பா சொன்னாரு?

அவரு தங்கச்சிக்கு பையன்  பாக்க சொன்னாரு..

அவ்வளவுதானே? பாத்தியா?

பார்த்தேன்,

அவுரு எப்படி  சொன்னாரு, நீ எப்படி பார்த்த?

அவரு சொன்ன மாதிரியே நல்ல ஹீ..

கவுண்டமணி: டேய்! வேணாம் சொல்லாத, படுவா..

அண்ணே, விடுங்கண்ணே, நீ சொல்லுப்பா,  எந்த மாதிரி பையன் பார்த்த..?

நல்ல ஹீரோ மாதிரி மாப்பிளைதான் பார்த்தேன்.

டேய்!  மறுபடியும் அதயே சொல்ற,,?

அண்ணே!  நீங்க சொன்ன மாதிரிதானே பாத்துருக்கான், அப்புறம் ஏன் போட்டு அடிக்கிறீங்க?

கவுண்டமணி(லேசான அழுகையோடு): நீங்களே சொல்லுங்க ஹீரோ இப்படியா  இருப்பான்? அவர் கை காட்டும் இடத்தில், நபர் அழுக்காக, பரட்டை தலை, லுங்கி, வாயில் பீடி, எட்டு நாள்  மீசையோடு, போதையில் சொருகும் கண்களோடு, கேட்ட வார்த்தை பேசியபடி இருக்கிறான். அவனைக்கண்டு அதிர்ந்து போனவர்கள் செந்தில் பக்கம் திரும்பி,

என்னப்பா இது?

என்னங்க? இவர் ஹீரோ மாதிரின்னு சொன்னாரே தவிர, எந்த கால ஹீரோன்னு சொன்னாரா? இப்போல்லாம் ஹீரோ இப்படித்தானே இருக்காங்க?

கவுண்டமணி: டேய்! வேண்டாம், ஓடிப் போயிடு... அடிக்க வர, செந்தில் தப்பித்து ஓடுகிறார்..