கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 1, 2011

semifinal world cup 2011



ஒரு வழியாக உலக கோப்பை அரை  இறுதியில் பாகிஸ்தானை புறமுதுகிடச் செய்து வெற்றி வாகை சூடி விட்டோம்.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை, உயர் கல்வி நிறுவனங்கள்
வகுப்புகளை மாற்றி அமைத்துக்கொண்டன, மதியம் சாலைகள் வெறிச்சோடின.

பாகிஸ்தான் பிரதமரும்,  நமது  பிரதமரும்  அருகருகே  அமர்ந்திருக்க,  சோனியா காந்தி,ராகுல் காந்தி என்று அரசியல் பிரமுகர்களும்,
அமீர்கான், சுனில் ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்ற பாலிவுட்
பிரமுகர்கள், விஜய் மல்லையா போன்ற தொழில் அதிபர்கள் ஆகிய அத்தனை பேரும்
விளையாட்டை நேரில் கண்டு களித்தார்கள் என்றால்,  பல தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் பார்க்க வசதியாக பெரிய  திரை  அமைத்திருக்கிறார்கள்,  சிலவற்றில்  ஊழியர்களுக்கு
இலவசமாக பாப்கார்னும், பஞ்சுமிட்டாயும் கூட வழங்கப்படிருக்கின்றன.
எங்கள் குடியிருப்பில் கூட பெரிய திரை அமைத்து  எல்லோரும்  சேர்ந்து  உட்கார்ந்து  விசிலடித்து,  கை தட்டி மகிழ்ந்தோம். முத்தாய்ப்பாக பட்டாசு!

இந்த மாட்சைப் பார்த்து முடித்தவுடன் எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றின;
ஒன்று பேசாமல் ஹாக்கியை எடுத்து விட்டு கிரிகெட்டை நம் தேசிய விளையாட்டாக 
அறிவித்து விடலாமே...   

இந்தியாவின் வெற்றி உறுதியானவுடன் குறிப்பாக அந்த கடைசி காட்சிர்க்குப் சோனியா 
காந்தி காட்டிய மகிழ்ச்சியைப் பார்த்த போது இன்னும் இவரை இத்தாலிக்காரர் என்பது 
நியாயம் கிடையாது என்று தோன்றியது.