கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 6, 2018

வரமா சாபமா?

வரமா சாபமா? 

சமீபத்தில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விஷயம் ஸ்ரீதேவியின் மரணம். வாழ்ந்த பொழுது எப்படி ஊடகங்களை ஈர்த்தாரோ, அதே அளவு, ஏன் அதை விட அதிகமாக ஊடகங்களை ஈர்த்தார். 

எத்தனை எத்தனை விமர்சனங்கள்?  எத்தனை யூகங்கள்? அவர் மரணத்திற்கு காரணம் அழகை பாதுகாக்க அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், அவர் அருந்தியிருந்த மது, என்றெல்லாம் ஹேஷ்யங்கள்.  மது விஷயம் வெளி  வந்ததும் அவர் மீதிருந்த அனுதாபம் கொஞ்சம் குறைந்தது. மீம்ஸ்கள் அதிகரித்தது. இவைகளை கண்டித்தும் பலர் பதிவிட்டனர். 

ஒருவர், "எத்தனையோ பிரபலங்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனர். ஆனால் அவர்களெல்லாம் ஆண்கள் என்பதால் அவர்களின் அந்த பழக்கத்தை கண்டித்து எந்த செய்தியும் வந்ததில்லை. ஸ்ரீதேவி பெண் என்பதால் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஆணாதிக்க மனப்பான்மை" என்று எழுதி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் இவர்? ஆண்கள் செய்யும் எல்லா  அபத்தங்களையும் பெண்களும் செய்வதுதான் பெண் விடுதலையா?






இருக்கட்டும். அழகு என்பது ஆண்டவன் அளிக்கும் அன்பளிப்பு என்று கூறுவார்கள். ஆனால் ஸ்ரீதேவி மட்டுமல்ல, ஜெயலலிதா, டயானா சார்லஸ், மார்லின் மன்றோ போன்ற அழகிகளின் வாழ்க்கையின் சோகமும், அவர்களின் மரணத்தின் மர்மமும் எப்போதோ படித்த ஒரு புது கவிதையை நினைவூட்டுகின்றன. 

இங்கே 
வரங்களே சாபங்களானால்
தவங்கள் எதற்காக?