கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, March 27, 2017

மாலையில் மலர்ந்த நோய்..:((

மாலையில் மலர்ந்த நோய்..:((

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு கணினியை திறந்திருக்கிறேன். மார்ச் 8 அன்று பேத்திக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் மொட்டை அடிப்பதற்காக சென்று விட்டு வந்தவள் 10ம் தேதி மதியம் உடல் வலி, தலை வலி, குளிர் என்று உடல் நல குறைவுக்கான அறிகுறிகள் தோன்ற ஒரு க்ரோஸினை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டேன். மறு நாள் உடல் நல பாதிப்பு அதிகம் இருந்ததால் மருத்துவரிடம் சென்றேன். அவர் தந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதில் காலையில் ஜுரம் இருக்காது. "காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்"  என்ற வள்ளுவர் வாக்கினைப் போல மதியத்திலிருந்து உடல் நலம் மோசமாகும், மாலையில் அதிகமாகி விடும். ஒரு வேலை டைபாய்டு ஆக  இருக்கப் போகிறது என்று பயமுறுத்தினார்கள். முதல் நாள் 102 டிகிரியைத் தோட்ட ஜுரமாணி அடுத்த நாள் 104 இல் போய் நின்றது. பிறகு என்ன? ரத்தப் பரிசோதனை, ட்ரிப்ஸ், ஆன்டிபயாட்டிக்ஸ் ஆரம்பம்.. 
பிளட் டெஸ்ட் ரிசல்ட் நார்மல், வைரல் பீவர்தான். ஒரு வாரம் இருக்கும். மூன்று நாட்கள்தானே ஆகின்றன? இன்னும் நாலு நாட்கள் இருக்கிறதே.. கொஞ்சம் கொஞ்சமாக ஜுரம் குறைந்து விடும். " என்றார் மருத்துவர். குறைந்தது. ஆனால் அசதியும் இருமலும், வாய் கசப்பும்... அப்பப்பா! இன்னும் முழுமையாக சரியாகவில்லை. 

வாட்சாப் செய்திகள் இருநூறை தாண்டி விட்டன. அவ்வப்பொழுது. ஏதோ கொஞ்சம் வாட்சாப் மற்றும் முகநூல் மட்டும் பார்த்தேன். செல்போனில் ப்ளாக் பார்ப்பது அத்தனை சௌகரியமாக இல்லை. 
இனிமேல்தான் விட்டவற்றை பிடிக்க வேண்டும்.