விநாயகர் குறித்த ஒரு வினாடி வினா
1. விநாயகருக்கு விசேஷமான நாமாக்கள் எத்தனை?
2. முருகனைப் போலவே விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு, அதில் குறைந்த பட்சம் மூன்றினை குறிப்பிடுங்கள்.
3. பொல்லாப் பிள்ளையார்/பொள்ளாப் பிள்ளையார் இரண்டில் எது சரி? ஏன்?
4. விநாயகருக்காக பிரத்யேகமாக எட்டு கோவில்கள் ஒரு தொகுப்பாக அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தோற்றச் சிறப்பு என்ன?
6. குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பான் என்பது வழக்கு, ஆனால் ஊரின் மத்தியில் இருக்கும் இந்த குன்றின் உச்சியில் விநாயகர் அமர்ந்து ஊருக்கே பெருமை சேர்க்கிறார். நான் குறிப்பிடுவது எந்த ஊரை?
7. "முப்புரம் எரி செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா" திருப்புகழில் குறிப்பிடப் படும் இந்நிகழ்ச்சி நடைப் பெற்றதாக நம்பப்படும் சென்னைக்கு அருகில் உள்ள அந்தத் தலம் எது?
8. ஒரு முறை மகா விஷ்ணுவின் சக்கரத்தை குழந்தை கணேசன் வாய்க்குள் போட்டுக் கொண்டு விட்டான். அதை அவனிடமிருந்து வரவழைக்கும் பொருட்டு மாமா மஹா விஷ்ணுஒரு செயல் செய்தார். அதைப் பார்த்து சிரித்த கணேஷ் சக்கரத்தை வெளியே துப்பி விட்டாராம். மகா விஷ்ணு செய்த அந்த செயலை நாம் இன்றைக்கும் விநாயகருக்கு முன் செய்கிறோம். அந்த செயலை மூளைக்கான யோகா என்று மேல் நாட்டினர் இன்று கொண்டாடுகின்றனர். சுருக்கமாக அந்த செயலை நாம் எப்படி குறிப்பிடுவோம்?
9. நவ கிரஹங்களில் எந்த கிரஹத்திற்கு அதிபதியாக விநாயகர் கருதப் படுகிறார்?
10. விநாயக சதுர்த்தி அன்று இருபத்தோரு இலைகளால் பிள்ளையாரை அர்ச்சிக்க வேண்டும், அதில் ஒரு இலையால் அன்று மட்டும்தான் அர்ச்சிக்க வேண்டும். அது எந்த இலை?