அருவி
(திரைப்பட விமர்சனம்)
ஆனால் அதையே காட்டிக் கொண்டிருந்தால் ரொம்பவும் அழுவாச்சியாக ஆகி விடுமோ?, அப்புறம் படம் ஓடுமா? என்னும் பயம் வந்து விட்டதோ என்னவோ, துப்பாக்கி முனையில் ஏழாம் வாய்ப்பாடு சொல்ல சொல்வதும், டம்ப் ஷராட்ஸ் விளையாடுவதுமாக சிறுபிள்ளைத் தனமாக தடம்மாறி, நம்ப முடியாமல் முடிகிறது. நடுவில் தேவை இல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணனை வேறு சீண்டுகிறார்கள்.
ஊதினால் பறந்து விடுவது போல இருக்கும் பெண், தாத்தா காலத்து கை துப்பாக்கியை அனாயசமாக கையாளுவதும், அவளும் அவளுடைய திரு நங்கை தோழியும் தனியார் டி.வி. நிலையத்தை மிகச் சுலபமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், மிகப் பெரிய போலீஸ் பட்டாளத்தை திணரச் செய்வதும், நோய் முற்றி ஹெச்.ஐ.வி. நோயாளிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் இருக்கும் பெண் அங்கிருந்து தப்பிச் சென்று எங்கேயோ ஒரு மலையில் தனியாக குடிசை கட்டிக்கொண்டு வாழ்வதாக காட்டுவதும்,அங்கிருந்த படியே வாய்ஸ் மெசேஜ் அனுப்பபுகிறாள் என்பதும்., காதில் பூ அல்ல மாலையே சுற்றி இருக்கிறார்கள்.
கதா நாயகி அதிதி பாலன் நன்றாக நடித்திருக்கிறார். திரு நங்கையை நன்றாக காண்பித்திருப்பதற்காக பாராட்டலாம். இசை பிந்து மாலினி, பாடல்கள் குட்டி ரேவதி. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திறமை வாய்ந்தவராகத் தெரிகிறார். தன்னுடைய அடுத்த படத்தில் தனி மனித தாக்குதல் என்னும் சின்னத்தனங்களை விட்டு விட்டு நல்ல படங்களை கொடுப்பர் என்று எதிர்பார்ப்போம்.