பாகுபலிகோவிலும், ஹளபேடு சிற்பங்களும்
பொங்கல் விடுமுறையில் பாகுபலியை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். பாகுபலி என்றதும் அனுஷ்கா நடித்த பாகுபலி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் சென்றது பெங்களூரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜைனர்களின் புனிதத்தலமான கோமதீஸ்வரர் பாகுபலி கோவில்.
ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த கோவிலை அடைய 620 படிகள் என்று சிலரும், 720 படிகள் என்று சிலரும் கூறுகிறார்கள். மூச்சு முட்ட முட்ட படிகள் ஏறி அதுவும் கடைசி 20 படிகள் ஏறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு ஏறி 58 அடி உயர நிர்வாண சிலை... நான் ஒரு ஜெயின் ஆக இருந்திருந்தால் ஈர்த்திருக்கலாம்.
அந்த சிலைக்கு அருகே கீழ் பக்கத்தில் காணப்படும் புற்றிலிருந்து வெளிவரும் பாம்புகள் சிற்றின்ப வேட்கையையும், அவர் பாதத்திலிருந்து மேலெழும்பும் கொடி ஆன்மீக முன்னேற்றத்தையும் குறிக்கிறதாம்.
பாகுபலி சிலைக்கு எதிரே உள்ள விதானத்தில் காணப்படும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி சிலைகள், பாகுபலியை தரிசிப்பதற்காகச் செல்லும் முன் காணப்படும் குபேரன் சந்நிதி அதற்கு இரண்டு புறங்களிலும் இருக்கும் துவாரபாலகர்கள் போன்றவை இது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஹிந்து கோவிலாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. அங்கு கையில் கின்னாரத்தோடு இருக்கும் பெண்ணின் சிலையின் நுட்பம் கவர்கிறது.
தஞ்சை பெரிய கோவிலில் கூட எனக்கு இதே விதமாகத்தான் தோன்றும். காளஹஸ்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற தலங்களில் இருக்கும் தெய்வீக சாநித்யம் தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்காது. அங்கு வருபவர்களின் மனோபாவமும் கூட வழிபாடு என்பதை விட, கோவிலின் சிற்ப சிறப்பை ரசிப்பதாகத்தான் இருக்கிறது.
ஹலபிடுவிற்கு அருகில் இருக்கும் பேலூருக்கு செல்லவில்லை. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்கிறோமே, நேரில் பின்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.
![]() |
மலையின் மீதிருந்து தோற்றம் |
![]() |
குபேரன் சிலை |
![]() |
பாறாங்கல்லால் ஆன கொப்பரை |
அந்த கோயிலுக்குள்ளேயே இரண்டு சிவன் சன்னிதிகள் இருக்கின்றன. ஒன்று ராஜ கட்டியதாம், மற்றொன்று ராணி ஸ்தாபிதம் செய்ததாம். இருந்தாலும், அங்கு செல்பவர்கள் யாரும் பெரிதாக வழிபடுவதில்லை. சிற்பக்கலையை ரசிக்கத்தான் செல்கிறார்கள். கோவில் ஒரு மியூசியம் போலத்தான் இருக்கிறது.
![]() |
வாலி வதம் |
![]() |
போர் காட்சி. சரமாக பாயும் அம்பு |
![]() |
கோவர்த்தன கிரியை தூக்கி ஆனிரைகளை காக்கும் கண்ணன் |
![]() |
உமா மகேஸ்வரர் |
![]() |
பாற்கடல் கடையப்படும் சிற்பம் சிதைக்கப்பட்டிருக்கும் சோகம் |
ஹலபிடுவிற்கு அருகில் இருக்கும் பேலூருக்கு செல்லவில்லை. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்கிறோமே, நேரில் பின்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.