மத்யமரில் வெளியான என் இரு கதைகள் அங்கு வாசிக்கத்தவர்களுக்காக:
அவள் வருவாள்
"மண்டே கிரிஜா வராளாம்.."
"ஓ அப்படியா? வெரி குட்" ராதா என்னும் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
ஞாயிறு மாலையிலிருந்தே பாலா பரபரப்பானாள்.
திங்கள் காலை டிகாஷன் போடும்பொழுது, கிரிஜா நினைவுதான். அவள் வந்ததும் நல்ல காபியாக கொடுக்க வேண்டும். காபி கிரிஜாவுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
எட்டு மணி ஆனதும் தவிப்பாகி விட்டது. "இத்தனை நேரம் வந்திருக்க வேண்டுமே? ஏன் இன்னும் வரவில்லை?
செல்போனில் கிரிஜாவை தொடர்பு கொண்டபொழுது அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ரிக்கார்ட் செய்யப்பட்ட குரல் கூறியது.
பாலா வாசலுக்கும், உள்ளுக்கும் நடப்பதைப் பார்த்து ராதா,"ஏன் டென்ஷனாகுற? கிரிஜா வருவாள் .." என்றார்.
பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்த பொழுது கிரிஜா தன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்குவது தெரிந்தது.
தோ! கிரிஜா வந்துட்டாளே! குடுகுடுவென்று வாசலுக்கு ஓடி கதவை திறந்தாள்.
"வாவா! ஏன் இவ்வளவு நேரமாயிடுச்சு?.. இந்தா காபியை குடிச்சுட்டு அப்புறம் வேலையைப் பார். "
சரிம்மா, இத்தனை நாளா எல்லா நீங்களே தனியா பாத்துக்கிட்டீங்களா?" என்றாள் லாக் அவுட் முடிந்து வேலைக்கு வந்திருக்கும் வேலைக்காரி கிரிஜா.