கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 8, 2016

காலங்களில் அவள்......

நேற்று டி.வியில் ஏதோ ஓரு சானலில் "காலங்களில் அவள்  வசந்தம்" என்னும் பாடலை ஓளி பரப்பினார்கள். அருமையான பாடல்! காதலியை நினைத்து, காதலன் பாடும்  பாடல். அதே காதலி மனைவியான பின் முன்னாள் காதலன், இன்னாள் கணவன் எப்படி வர்ணிப்பான் என்று கற்பனை இக்னிஷனை ஆன் செய்தேன்(எத்தனை நாட்களுக்குத்தான் கற்பனை குதிரையையே தட்டிக் கொண்டிருப்பது?)

காலங்களில் அவள்......

காலங்களில்  அவள் கடும் கோடை
கலைகளிலே அவள் மாடர்ன் ஆர்ட்
மாதங்களில் அவள் மே மாதம்
மலர்களிலே அவள் எருக்கம் பூ

பறவைகளில் அவள் பருந்து
பாடல்களில் அவள் ஓப்பாரி
கனிகளிலே அவள் வேப்பம்பழம்
காற்றினிலே அவள் சண்டமாருதம்

9 comments:

  1. அருமையான கற்பனை. ஆனால் இது என்னைப் போன்றவர்களுக்குப் பொருந்தாது!! நாங்கள் எல்லாம் இன்னமும் கொண்டாடும் க்ரூப்பாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வெரி குட்! அப்படித்தானே இருக்கணும்.

      Delete
  2. சேம் சைட் கோல் போட்டிருக்கீங்க என்னை மாதிரியே! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். எழுதும்பொழுதே தோன்றியது. சும்மா ஜாலிக்கு..ஹி ஹி!

      Delete
  3. ji my friend tells that even arranged married women also are addressed as PARUNTHU..OPPARI...ETC after some months...
    by their husbands...
    you know that there are some exceptions...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், ஜோக் சொன்னால் அனுபவிக்கணும், ஆராயாக் கூடாது.

      Delete
  4. //பறவைகளில் அவள் பருந்து// ;))

    ReplyDelete