கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 5, 2017

வேண்டுதல்

வேண்டுதல் 



இதயத்தில் பிறக்கின்ற எண்ணங்கள் யாவுமே 
இனிமையாய் இருக்க வேண்டும் 
நிலத்தில் நான் செய்யும் செயல்கள் யாவுமே 
நலத்தையே விதைக்க வேண்டும் 
பொய்மையை சூதினை பொழுதில் மறந்து 
புவனத்தை ஆள வேண்டும்
நல்லதை நண்பனை நன்றியை என்றும்
நான்  நழுவாதிருக்க வேண்டும்
இத்தனை நலன்கள் பெற்று நான் வாழ்ந்திட 
அம்மா உன்னருள் வேண்டும்
மனதை காயத்தை மாண்புரச் செய்ய 
உன் நினைவதில் வேண்டும்  

13 comments:

  1. நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைபட வேண்டும் போல! நல்ல மனம் வாழ்க.

    ReplyDelete
  2. கூடவே நாடு போற்ற வாழ்க என்று கூறிக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  3. அருமை...பாரதியின் வரிகளின் நினைவு வருகிறது...கூடவே சிந்துபைரவி படப் பாடலும் நினைவுக்கு வருகிறது!!

    ReplyDelete
  4. அருமையான வரிகள்

    ReplyDelete
  5. நம் திரட்டியில் பதிவின் இணைப்பு மட்டும் கொடுத்தால் போதும்... மேலும் விவரங்களுக்கு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Bloggers-WhatsApp-Thiratti.html

    ReplyDelete