கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 22, 2019

காலம் வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே

15 comments:

  1. அன்பு பானு மா எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத சம்பவம். பரீக்ஷித்து பிறந்ததே கண்ணன் பதுகாப்பில். அவனுக்குக் கலியினால் வந்த சோதனை.

    நல்லதும் கேள்விப்படுகிறோம் கெட்டதும் கேள்விப்படுகிறோம்.
    அசந்து மறந்து ஒரு வசவு வார்த்தை வராமல்

    அதீத சோகத்தில் ஒரு நினைவு வராமல் இருக்கப் பழக வேண்டி இருக்கு.
    அந்தக் கண்ணன் நம்மைக் காக்கட்டும்.
    மிக மிக நன்றி மா. என்னிக்கும் இது போல நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருங்கள்.
    அன்புடன், ரேவதி.

    ReplyDelete
    Replies
    1. //அசந்து மறந்து ஒரு வசவு வார்த்தை வராமல்

      அதீத சோகத்தில் ஒரு நினைவு வராமல் இருக்கப் பழக வேண்டி இருக்கு.//
      எவ்வளவு விஷயங்களை இந்த இரண்டு வரிகளில் சொல்லி விட்டீர்கள்? நன்றி. வேணும் ஆசிர்வாதம்.

      Delete
    2. அசந்து மறந்து ஒரு வசவு வார்த்தை வராமல்//

      வல்லிம்மா ஹைஃபைவ்! நான் அடிக்கடி னினைப்பது மகனுக்கும் சொல்லுவது. நம் நாவில் மறந்தும் கூடக் கெட்ட வார்த்தைகள் வந்துவிடக் கூடாது என்று...அது போல மனதிலும் வரக் கூடாது...உணர்ச்சிவசப்பட்டாலும் கூட வார்த்தைகளில், எண்ணங்களில் கவனம் தேவை என்று. இதில் நம்பிக்கை நிறைய உண்டு.

      தன்வினை தன்னைச் சுடும் என்பதில் அதீத நம்பிக்கை உண்டு.

      கீதா

      Delete
  2. சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள், வழக்கம் போல.

    தலைப்பில் கெட்டு கேட்டு விட்டதோ!

    ReplyDelete
  3. எப்போதும் என் மகன்தான் வீடியோ எடுத்து, யூ டியூபில் அப் லோட் செய்வான், மகன் ஊரில் இல்லாததால் கணவரின் செல் போனில் எடுத்து, நான் அப் லோட் செய்தேன். முதலில் டைட்டில் இணைக்க மறந்து விட்டேன், தட்டு தடுமாறி இணைத்ததில் பிழையை இப்போதுதான் பார்த்தேன். மாற்றலாம் என்று வந்தால் பின்னூட்டம். எனிவே குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. சிறப்பான கதை. யானை வரும் பின்னே வாசகத்தின் தொடர் வாசகம் அறிந்து கொண்டேன்.

    உத்திரப் பிரதேசத்தில் ஷுக்ரதால் என்ற இடத்தில் இந்தக் கதை சம்பந்தப்பட்ட கோவில் இருக்கிறது. பரிக்ஷீத் மஹாராஜாவுக்கு ஏழு நாட்கள் கெடு... சுகப் பிரஹ்ம ரிஷி பரிக்ஷித் மஹாராஜாவிற்கு பாஹவதத்தினை ஏழு நாட்கள் சொன்ன இடம். பாஹவத சப்தாஹம் இங்கே எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். எனது பக்கத்தில் கூட இத்தலம் பற்றி எழுதியது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஷுக்ரதால் பற்றி இப்போதுதான் முதல்முறையாக கேள்விப்படுகிறேன். வருகைக்கும் தகவலுக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  5. பானுக்கா சூப்பர் கதை. இந்தக் கதை இதுவரை கேட்டதில்லை.

    நல்லா சொல்லிருக்கீங்க அக்கா..

    கீதா

    ReplyDelete
  6. ஸ்வாமி சின்மயானந்தா சொல்லியிருக்கும் கதை இது.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    நல்ல கதை. அதை நல்ல அருமையான உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறீரகள். கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. Audio is not clear. May be in my computer. will come afterwards

    ReplyDelete