கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 31, 2025

 பாரதி பாஸ்கர் செய்வது சரியா?

பாரதி பாஸ்கர் நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகம் கிடையாது. பட்டிமன்றத்தில் மட்டுமல்லாது கம்பன் கழங்கங்களிலும் ஆழமாக உரையாற்றக் கூடியவர். சமீபமாக யூ டியூபில் கதைகளை சொல்கிறார். கவனியுங்கள், சொல்கிறார், படிப்பதில்லை. அவருடைய மேடை அனுபவங்கள் கதைகளை திறம்பட சொல்ல உதவுகின்றன. குரலில் நல்ல மாடுலேஷனோடு அழகாக சொல்கிறார். 

அவர் கதை சொல்வதில் ஒரு விஷயம் சற்று நெருடலாக இருக்கிறது. ஒரு கதையை அந்த கதாசிரியர் எந்த காலத்தில் எழுதினாரோ அப்பொழுதிருந்த சூழலைத்தான் அவர் தன் கதையில் குறிப்பிட்டிருப்பார். இவரானால் அந்த குறிப்பிட்ட சூழலை தற்காலத்திற்கேற்றார்போல மாற்றி விடுகிறார். 

சுஜாதாவின் மத்யமர் கதைத் தொகுப்பில் தாய் -2 என்று ஒரு கதை உண்டு. அதில் வயதான விதவைத் தாயை பராமரிக்கும் பொறுப்பை அண்ணன்,தம்பி இருவரும் தட்டிக் கழிக்கப் பார்ப்பார்கள். டில்லியில் உயர் பதவியில் இருக்கும் அண்ணன் அம்மாவை அழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தனக்கு வெளிநாட்டு டெபுடேஷன் என்பான். தம்பியின் மனைவியோ நாம்தான் இளித்த வாயர்களா? என்பாள். இந்த சமயத்தில் ஊரிலிருந்து வரும் மாமா இவர்களின் அம்மாவுக்கு பிதுர்ராஜிதமாக கிடைக்க வேண்டிய சொத்திலிருந்து எட்டு லட்சம் கிடைக்கும், அந்த பணத்தில் திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, மிச்ச பணத்தை வங்கியில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் ஒரு ஆளை துணைக்கு வைத்துக் கொண்டு தனியாகவே இருக்கலாம் என்றுகூறுவார். உடனே தம்பிக்காரன், ராத்த்ரி ஒன்பது மணிக்கு மவுண்ட் ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு," என்று தந்தி கொடுStarting by grand trunk express tomorrow to take mother Divakar த்துவிட்டு திரும்புவான். வந்தால் வீட்டில் அவனுக்கு அண்ணனிடமிருந்து, Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar என்று தந்தி வந்திருக்கும். 

இந்தக் கதையை கூறிய பாரதி பாஸ்கர் தந்தி என்று கூறாமல் SMS வருவதாக கூறுகிறார். சுஜாதா இந்தக் கதையை எழுதிய காலத்தில் எஸ்.எம்.எஸ். என்னும் ஒரு விஷயமே கிடையாது. அப்போது இருந்த தந்தி இப்போது இல்லை, ஆனால் இந்தக் கதையை படிக்கும் அல்லது கேட்கும் இளைய தலைமுறைக்கு தந்தி என்று ஒரு விஷயம் அப்போது இருந்தது. ராத்திரி எந்த நேரத்திலும் தந்தி கொடுக்க முடியும் போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடியுமே. 

அதைப் போல ஆர்.சூடாமணியின் 'அந்நியர்கள்' என்னும் கதையில் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் தங்கை சௌமியாவை தன்னுடைய லேடீஸ் கிளபிற்கு அழைத்துச் செல்லும் அக்கா சவிதா அங்கு ஒரு உடல் ஊனமுற்ற ஒரு ஏழை மாணவனுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டபொழுது அக்கா பத்து ரூபாய் கொடுப்பாள், தங்கை சற்று யோசித்துவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தாள் என்றுதான் சூடாமணி எழுதியிருப்பார். பாரதி பாஸ்கருக்கு பத்து ரூபாய், ஐந்து ரூபாயெல்லாம் ரொம்ப குறைவு என்று தோன்றியதோ என்னவோ, அதை ஐநூறு ரூபாயாக உயர்த்தி விட்டார். இப்போது வேண்டுமானால் பத்து ரூபாய்க்கு மதிப்பு இல்லாமல் இருக்கலாம். சூடாமணி அந்தக் கதை எழுதிய காலத்தில் பத்து ரூபாய்க்கு மதிப்பு இருந்திருக்கிறது என்பதை அந்தக் கதையை படிக்கும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பை பாரதி பாஸ்கர் தடுத்து விடுகிறார். 

அந்தக் கதையில் ஈராஸ் தியேட்டரில் ஓடும் எல்லாப் படங்களுக்கும் சவிதா தன் தங்கையை அழைத்துச் சென்றதாக சூடாமணி எழுதியிருப்பார். இப்போது ஈராஸ் தியேட்டரே இல்லை, அதற்காக இ.ஏ.மாலிலோ அல்லது ஃபீனிக்ஸ் மாலிலோ படம் பார்த்தார்கள் என்று சொல்லிவிட முடியுமா? அப்போது அடையாரில் ஈராஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது என்னும் தகவல் நமக்கு கிடைக்கிறது, அதை காலத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறேன் என்று கதை சொல்கிறவர்கள் மாற்றினால் என்னவாகும்?இன்றைக்கு இவர் ஒன்றை மாற்றுவார், நாளைக்கு வேறு ஒருவர் வேறு ஒன்றை மாற்றுவார், கடைசியில் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டை கெடுத்தான் என்பது போல கதை சொல்லிகள் கதையை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!

ஸாஹித்ய் கர்த்தாக்களின் கிருதிகளை(பாடல்களை) மாற்ற மற்றவர்களுக்கு எப்படி அதிகாரம் கிடையாதோ, அதைப்போல எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியேதான் சொல்ல வேண்டும், அதை மாற்ற மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றுதான் நான் கருதுகிறேன்.   

Saturday, December 27, 2025

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...



என் கல்லூரி நாட்களில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகள் கமலும்,ரஜினியும். நிறைய இளம் பெண்களுக்கு கமலஹாசனை பிடிக்கும், எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் நானும் அவரைப் போலவே வேகமாக பேசுவேன். அப்படி வேகமாக பேசியதால் நிறைய கிண்டல், கேலி, அவமானங்களுக்கு உள்ளாகி எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையே இருந்தது. வேகமாக பேசுமொரு ஆள் வெற்றிகரமான நட்சத்திரமானது அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி நம்பிக்கை அளித்தது. அதுவே அவரை ரசிக்க முக்கிய காரணம். 

அண்ணாமலை படம் வெளியானபொழுது என் மகனுக்கு ஐந்து வயது. அந்தப் படம் அவனுக்கு அவ்வளவு பிடித்தது. நாங்கள் அப்போது மஸ்கட்டில் இருந்தோம். ஒரு தோழியின் வீட்டிற்கு முதல் முறையாகச் செல்கிறோம், தோழியின் கணவர் என் மகனிடம், "உன் பேர் என்ன?" என்று கேட்டதும், என் மகன், "என் பேரா? அண்ணாமலைனு வெச்சுக்கலாமே" என்றானே பார்க்கணும். தோழியின் கணவர் இன்றுவரை என் மகனை அண்ணாமலை என்றுதான் அழைப்பார்.

ஐந்து வயதாகும் என் பேத்தி சில சமயம் என்னுடன் படுத்துக் கொள்வாள். இரட்டைக் கட்டிலின் சுவரோரம் அவளை படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவளுக்கு போர்த்தி விட்டேன். நான் இந்தப் பக்கம் இருந்ததால் இரண்டு கைகளாலும் போர்வையை பிடித்துக் கொண்டு, வலை வீசுவது போல் வீசினேன், போர்வை கச்சிதமாக அவள் மீது வீழ்ந்தது. மறுநாள் படுத்துக் கொண்ட என் பேத்தி, "கேன் யூ போர்திங் மீ லைக் ரஜினிகாந்த்?' என்றாள். எனக்கு ஒண்றும் புரியாமல் விழித்து,"வாட்?"என்றேன். 

"லைக் யெஸ்டெர் டே"

அப்போதும் புரியாமல் நான் விழிக்க, என் மகள், "நீ அவ்ளோ ஸ்டைலா போர்த்தி விடறயாம்.." என்று விளக்கினாள். தோடா! என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு தினசரி அவளுக்கு அது வழக்கமாக போய் விட்டது. தூங்கச் செல் என்றால், "ஐ ஆம் வெய்டிங் ஃபார்ரஜினிகாந்த்" என்பாள். "அவர் சென்னையில் இருக்கிறாரோ, இமயமலையில் இருக்கிறாரோ?" என்பேன்.

இரண்டு நாட்கள் முன்பு அவளுக்கு போர்த்தி விடச் செல்ல நேரமாகி விட்டது, மாடிப்படியில் அமர்ந்த வண்ணம் உறங்கத் தொடங்கி விட்டாள். ஒரே வீச்சில் போர்வையை போர்த்த வராவிட்டால், "டு டே ரஜினிகாந்த் டின்ட் கம் ப்ராப்பர்லி" என்பாள். 

சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்? போர்வையை ஸ்டைலாக போர்த்தி விடுவதும்தான். இப்பொழுது நல்ல தேர்ச்சி அடைந்து விட்டேன். அதனாலோ என்னவோ,  முந்தாநாள் "யூ ஆர் த பெஸ்ட் லேடி ரஜினிகாந்த்" என்றாள். ஆ! நயன்தாராவுக்கு போட்டியா?? 

இதில் என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால், பொதுவாக ஒரு தலைமுறையினர் ரசிக்கும் நடிக, நடிகையர்களை அடுத்த தலைமுறையினரே ரசிக்க மாட்டார்கள். ஆனால், எனக்கும் ரஜினிகாந்தைப் பிடிக்கும், என் குழந்தைகளுக்கும் ரஜினிகாந்தை பிடிக்கும் இப்போது என் பேத்திக்கும் ரஜினிகாந்தை பிடித்திருக்கிறது. ஃபினாமினல்! தலைவா யூ ஆர் கிரேட்! Happy birthday!  

 Dec.12th நான் முகநூலில் எழுதியது.

Thursday, December 25, 2025

டொமினிக் & த லேடீஸ் பர்ஸ்(மலையாளம்) & காந்தா

 டொமினிக் & த லேடீஸ் பர்ஸ்(மலையாளம்)

காவல் துறையில் பணியாற்றிய டொமினிக்(மம்முட்டி) அங்கு அவர் நடந்து கொண்ட முறையால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மனைவியும் அவரை விவாகரத்து செய்து விடுகிறார். அவர் தனியாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்துகிறார். அதில் பெரிய வருமானம் இல்லை, வீட்டு வாடகை கொடுப்பதற்கே திணறும் நிலை. அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரான பெண்மணி இவரிடம் கருணையோடு நடந்து கொள்கிறார். ஒரு நாள் மருத்துவமனையில் அவருக்கு கிடைத்த ஒரு பெண்ணின் பர்ஸுக்கு தொந்தக்காரியை கண்டுபிடிக்கச் சொல்கிறார் அவர்.
அந்த பர்ஸுக்கு சொந்தக்காரி பூஜா ரவீந்திரன் என்னும் ஒரு பெண் என்பது தெரிகிறது. அதை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கச் சென்றால் அவரோடு சேர்ந்து வசிக்கும் பெண், நான்கு நாட்களாக பூஜா மிஸ்சிங் என்கிறார். அதை விசாரிக்கத் தொடங்கினால் அந்தப் பூஜாவின் காதலன் கார்த்திக்கை இரண்டு வருடங்களாக தான் பார்க்கவில்லை என்கிறாள் கார்த்திக்கின் சகோதரி. இப்படி அடுத்தடுத்து திருப்பங்கள். அவைகளை டொமினிக் எப்படி சால்வ் செய்கிறார் என்பதுதான் கதை.
நெய்ல் பைட்டிங் கதையை எந்தவித பரபரப்புமில்லாமல் நிதானமாக, ஆனால் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் சிறப்பு!.
டொமினிக்காக மம்முட்டி, அவரது அசிஸ்டெண்டாக கோகுல் சுரேஷ். இதைத் தவிர வினீத் போன்ற நமக்கு பரிச்சயமான பல முகங்கள். எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்குமே? நகைச்சுவை அறவே இல்லை, ரத்தம் பீரிடும் வன்முறை இல்லை. வெப் சீரீஸ் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை, ஆனாலும் குடும்பத்தோடு ரசிக்கலாம்.

காந்தா

துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ, காயத்ரி, இவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, நிழல்கள் ரவி, வையாபுரி, ஆடுகளன் நரேன் போன்றவர்களும் இருக்கிறார்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.

டி.கே.மகாதேவன் என்னும் சூப்பர் ஸ்டாராக துல்கர், அவரை உருவாக்கிய இயக்குனர் சமுத்திரகனி.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் பாதியில் நின்று போன படத்தை மீண்டும் துவக்குகிறார்கள். அவர்கள் இருவரும் படப்பிடிப்பில்மோதிக் கொள்கிறார்கள். தன் விருப்பப்படிதான் கிளைமாக்ஸ் எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவருமே வீம்பாக நிற்கிறார்கள். துல்கர் மீது காதல் வசப்படும் கதாநாயகி பாக்யஸ்ரீ கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ராணா துப்பு துலக்குவதுதான் இரண்டாம் பாதி. 

MKT ஐ நினைவு படுத்துவது போல துல்கருக்கு TKM என்று பெயர். சிலர் கூறுவது போல எம்.கே.தியாகராஜ பாகவதரை நினைவு படுத்துவது போல எந்த காட்சியும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய நடை, உடை, பாவனைகள் எம்.ஜி.ஆரைத்தான் நினைவு படுத்துகின்றன. அவரும், சமுத்திரகனியும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை. ஏன் அந்த புதுமுக கதாநாயகி உள்பட யாரும் சோடை போகவில்லை. ராணாதான் கொஞ்சம் கோமாளித்தனமாக செய்திருக்கிறார். செட், உடைகள் எல்லாம் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன. 

பாடல்கள் கோலோச்சிய அந்தக் கால மெட்டில் பாடல் போட்டு அசத்தியிருக்க வேண்டாமா? கோட்டை விட்ட இன்னொரு விஷயம் ஒரு காட்சியில், "அவர் காலடியில் படுத்துக் கொண்டிருந்தால் தடவிக் கொடுப்பார், பறக்க ஆரம்பித்தால் இறக்கையை வெட்டுவார்" என்று துல்கர் கூறுவாரே தவிர துல்கருக்கும், சமுத்திரகனிக்கும் எதனால் ஆகாமல் போனது என்பது அழுத்தமாக காட்டப்படவில்லை. கொலையாளி யார் என்று யூகிக்க முடிந்தாலும் முடிவு எதிர்பாராதது.  

நெட்ஃப்லெக்ஸில் பார்கலாம்


Thursday, December 18, 2025

ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் - கனடா

கனடாவில் மிஸிஸாகா என்னும் இடத்தில் ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் பஜனை, ராதா கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற ஹிந்துமத நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் கீழ் தளத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கிச்சனோடு கூடிய ஹாலும், முதல் தளத்தில் கோவிலும் இருக்கிறது.

என்னோடு வாருங்கள், கோவிலை தரிசனம் செய்யலாம்.

ஹிந்து ஹெரிடேஜ் சென்டரின் வாயிலில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பீடத்தின் உயரம் ஏழு அடி.





நடுவில் இருக்கும் பெரிய ஸ்படிக லிங்கத்தைப் பார்த்த ஒரு குழந்தை, "திஸ் இஸ் பிக் எக்" என்றது. ஒரு வகையில் உண்மைதானே?

பொதுவாக என்னை வட இந்திய பாணி கோவில்களும், மார்பிள் மூர்த்தங்களும் அவ்வளவாக கவராது. ஆனால் இந்த மூர்த்தங்களில் இருக்கும் முக லாவண்யமும்
கருணையும் வசீகரித்தது. 



நவ கிரகங்கள்

ரசித்தீர்களா இல்லையா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? கருத்திடுங்கள். நன்றி.



Monday, December 8, 2025

கச்சேரி மாற்றங்கள்

கச்சேரி மாற்றங்கள்

இந்த உலகில் மாறுதல்தான் மாற்றம் இல்லாதது என்பார்கள். எத்தனையோ மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம், குறிப்பாக ஒரு முப்பது வருடங்களாக நடக்கும் மாற்றங்கள் அளவில் மிகப் பெரியதாக இருக்கின்றன. 

இப்பொழுது கர்நாடக இசையை எடுத்துக் கொள்வோமே, முன்பெல்லாம் கர்நாடக இசை பாடுகிறவர்கள் சினிமா பாடல்களை பாடவே மாட்டார்கள். 

சினிமா பாடல்கள் பாடுவது என்பது ஏதோ ஒரு தவறான பாடல்கள் பாடுவதைக் போன்ற தவறான செயல் என்பது போல கருதப்பட்டது. ஏன் எங்கள் வீட்டிலேயே கூட சினிமா பாடல் கேட்பதற்கும் சினிமா பாடல் பாடுவதற்கும் தடை உண்டு. ரேடியோவில் சினிமா பாடல்களை சத்தமாக வைத்து கேட்டு விட முடியாது. நாங்கள் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டு பெரியவர்கள் வந்தால், "என்ன டீக்கடை மாதிரி சினிமா பாட்டு? நிறுத்து" என்று அதை நிறுத்தி விடுவார்கள்.   

என் மூத்த சகோதரி முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவரும் சரி,அவருடைய தோழிகளும் சரி சினிமா பாடல்களை பாடி நான் கேட்டதே கிடையாது. அவர்கள் சினிமா பாடல்கள் பாடவே மாட்டார்கள் அது ஏன் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை அவர்களுக்கு அந்த பாட்டு பாட வரவில்லையா? அல்லது பாடக்கூடாது என்று அவர்களுடைய ஆசிரியர்கள் கண்டித்தார்களா என்று தெரியாது. 

ஆனால் இப்பொழுது பாருங்கள் ரஞ்சனி காயத்ரி என்னும் பிரபல பாடகிகள் பக்காவாக ஒரு கர்நாடக இசை கச்சேரி செய்வது போலவே இளையராஜாவின் சினிமா பாடல்களையே கச்சேரியாக செய்திருக்கிறார்கள். கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது.

ராக ஆலாபனை, ஸ்வரமெல்லாம் பாடி ஒரு மெட்லியாக பாடல்களை அவர்கள் தொகுத்துக் கொடுத்து இருக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. அதையும் கர்நாடக இசை கச்சேரிக்கு உடை அணிவது போன்ற அதே முறையில் நல்ல பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தலையில் பூ வைத்துக் கொண்டு, அதே போல மேடை அமைப்பு வயலின், மிருதங்கம், போன்ற பக்கவாதிகளோடு அவர்கள் அந்த சினிமா பாடல்களை பாடியது மிகவும் ரசிக்கும் படியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 

'ரங்கபுரவிகாரா.. ' என்னும் பாடலை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் தன்னுடைய அகம் என்னும் Bandல் ஃபியூஷனாக பேண்ட்,சர்ட் அணிந்து கொண்டு பாடி இருந்ததையும் ரசித்தோம். 

இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கொண்டு கர்நாடக இசையை பாடுகிறார்கள் நாம் அந்த பாடலை மட்டும் ரசிக்கிறோம் அவர்கள் உடையை ரசிக்காமல் பாடலை ரசிக்க கற்றுக் கொண்டு விட்டோம். 

சிந்து பைரவி படத்தில் சிவக்குமார் மீசை வைத்துக் கொண்டு நடித்ததை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது பாருங்கள் கர்நாடக இசை பாடும் இளைஞர்கள் நவீனமாக உடை அணிந்து கொண்டு மெல்லிசை பாடகரைப் போல உடை அணிந்து கொண்டு கர்நாடக இசை பாடுகிறார்கள் இதையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்களாகவே நான் கருதுகிறேன். அதற்காக வீம்புக்கு லுங்கி கட்டிக் கொண்டு கச்சேரி செய்ததை ஏற்க முடியவில்லை.

Wednesday, November 26, 2025

சத்தியசாயி பாபா 100வது பிறந்த தின கொண்டாட்டம்

 பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்100வது 

பிறந்த தின கொண்டாட்டங்கள் -கனடா 

நவம்பர் மாதம் 23ஆம் தேதி பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபவின் 100வது பிறந்த தினம். அதை உலகெங்கிலும் இருக்கும் அவரது பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். தீவிர சாயி பக்தர்களான என் மாப்பிள்ளையும், பெண்ணும் இங்கிருக்கும்(கனடாவில்) சாயி சென்டர் ஒன்றில் உறுப்பினர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை சாயி பஜனுக்குச் செல்வார்கள். நானும் செல்வதுண்டு நானும் சாயி பகதைதான். 

நவம்பரில் வரப்போகும் கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டிலேயே ஏற்பாடுகளை துவங்கி விட்டார்கள். நாடக ஒத்திகை, பிறந்த நாள் பாடல், பால விகாஷ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை என்று வாரத்தில் மூன்று நாட்கள் ஒத்திகை இருந்தது. 

நாடகங்களுக்கு பொருள்களை(ஸெட் ப்ராப்பர்டீஸ்) என் மகள் செய்தாள். அவளுக்கு உதவியாக இரண்டு பெண்கள் வார இறுதியில் வருவார்கள். அதில் ஒரு பெண் ராதையாக நடித்தார், அவர் வாட்டர்லூவில் படிக்கிறார். விடிய விடிய வேலை செய்து விட்டு, அவர்கள் படுத்துக் கொள்ளவே விடியற்காலை நாலு அல்லது ஐந்து மணி ஆகி விடும். காலை ஆறு மணிக்கு எழுந்திருந்து கிளம்பினால்தான் பஜனைக்குச் செல்ல முடியும். 

ராதா,கிருஷ்ணன் மற்றும் குட்டி கிருஷ்ணனின் நான்

நவம்பர் 22ஆம் தேதி பெண்கள் தினமாக (மஹிளா விபாக்) கொண்டாடினார்கள். அந்தநிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே நடிக்கும் ராதா பக்தி என்ற நாடகம் இருந்தது. சாய் சதீஷ் என்பவர்தான் அதை இயக்கினார். அதில் கிருஷ்ணனாகவும், ராதையாகவும் நடித்த பெண்களுக்கு உணர்ச்சியை சரியாக காட்டத் தெரியவில்லை என்று ஒரு எண்ணம் இருந்ததாம். என் மகள் இதை என்னிடம் சொன்னபோது, நான்,"மேக்கப் போட்டுக் கொண்டு, மேடையில் ஏறி விட்டால் தன்னால் அந்த பாவம்(bhavam) வந்து விடும்" என்றேன்.

நான் சொன்னபடியேதான் நடந்தது. ராதையாக நடித்த பெண் கல்லூரி மாணவி. சிறு குழந்தை போல சிரித்து, விளையாடி, உற்சாகமாக இருப்பாள். அந்தப் பெண்ணுக்கு எப்படி அவ்வளவு மெச்சூர்ட் தோற்றம் வந்தது என்பது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாடகம் முடிந்து கீழே இறங்கியதும் அந்தப் பெண் ஏனோ விசித்து விசித்து அழுதாள். தன்னுடைய இயல்பிற்குத் திரும்ப சற்று நேரமாகியது.  கிருஷ்ணனாக நடித்த பெண்ணின் சிரிப்பும், நடையும் ஆஹா! 

மேற்கண்டவாறு இருக்கும் சிம்மாசனம், தூண்கள், மரம் இவைகளை என் மகளும் இன்னும் இரண்டு பெண்களும் செய்தார்கள்



புட்டபர்த்தியில் இருக்கும் தேரைப்போல அச்சு அசலாக ஒரு மினியேச்சர் தேரை உருவாக்கியிருந்தது சுஜி என்னும் பெண். 

தேரின் நுணுக்கமான வேலைப்பாடுகள் கவனிக்கவும்

சத்யபாமாவாக நடித்த பெண்ணும், நெகடிவ் ரோல் ஒன்றை செய்த என் மகளும் மிகத்திறமையாக செய்து பாராட்டுகளை அள்ளினர். கனடாவின் மிசிசாகா என்னும் இடத்தில் இருக்கும் ஹிங்து ஹெரிடேஜ் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நாடகம் துவங்குவதற்கு முன் அதில் நடித்தவர்கள் எப்படி தயாரானார்கள் என்பதை கவனிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. அவற்றை புகைப்படமெடுத்தேன்.

பீஸாவை அமுக்கும் கிருஷ்ணர் :))
 
தவம்





ஒரு நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்றால் அதற்கு எத்தனை பேர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது என்பது புரிந்தது.   


Monday, November 3, 2025

ஆப்பிள் ஃபெஸ்டிவெலும் ஹாலோவினும்

 ஆப்பிள் பெஸ்டிவலும் ஹாலோவினும்

Apples straight from the farms

ஃபால் எனப்படும் இலையுதிர் காலம்தான் இங்கே(கனடாவில்) அறுவடைக் காலம். ஆப்பிள், மஞ்சள் பூசணி என்னும் பரங்கிக்காய், சோளம் போன்றவை அறுவடை செய்யப்படும். அதை ஒட்டிதான் thanks giving day வருகிறது. நம்முடைய அறுவடைத் திருநாளான பொங்கலைப் போல. நாம்  காணும் பொங்கலன்று உறவினர்களைப் பார்க்கச் செல்வது போல இங்கும் தாங்க்ஸ் கிவிங் டே அன்று தங்கள் உறவினர்களை காணச் செல்கிறார்கள்.

சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிட்கப்பட்டுள்ள பரங்கிக் காய்கள்

பரங்கிக்காய்கள் ஹாலோயின் கொண்டாட்டத்திற்கு மிகவும் அவசியம். வீட்டு வாசல் படிகளில் வைக்கிறார்கள். ஆப்பிள்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருள்களை 'ஆப்பிள் ஃபெஸ்டிவெல்' என்று கொண்டாடி சந்தைப் படுத்துகிறார்கள். ஏப்ரலில் மேப்பில் ஃபெஸ்டிவெல் போல, அக்டோபரில் ஆப்பிள் ஃபெஸ்டிவெல்.

மேப்பில் ஃபெஸ்டிவெல் போலவே தெருவை அடைத்து கடைகள். புகைப்படங்களில் பாருங்கள்:









இதையடுத்து எல்லா வீடுகளும் ஹாலோயினுக்குத் தயாராகின. படிகளில் பரங்கிக்காய், ஜன்னலில் தொங்கும் கருப்புப் பூனை, பால்கனியிலும்,மனத்திலும் தொங்கும் எலும்பு கூடு பொம்மைகள், ஒட்டடை போன்ற அமைப்பு. ஹாலோவின் அன்று விதம் விதமான வேடங்களில் குழந்தைகள் எல்லா வீடுகளுக்கும் செல்கிறார்கள்.  அங்கு அவர்களுக்கு சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளைத் தருகிறார்கள். பேய், போல வேடம் தரித்து பயமுறுத்தவும் செய்வார்களாம். இதை Trick or treat என்கிறர்கள். இந்தப் பழக்கம் இப்போது நம் ஊரிலும் வந்து விட்டது. 
ஹாலோவின் புகைப்படங்கள் கீழே:






கருப்பு பூனையாக என் பேத்தி
 

அடுத்தது கிருஸ்துமஸ் அலங்காரங்கள் தொடங்கும்.

 

Monday, October 27, 2025

நாயகன்(விமர்சனம்)

நாயகன்


இப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொலைகாட்சியில் மீண்டும் 'நாயகன்' திரைப்படம் பார்த்து முடித்தேன் Oh my God! What a movie! என்ன ஒரு திரைக்கதை, எத்தனை சிறப்பான பவர்ஃபுல்லான வசனங்கள், அருமையான நடிப்பு, இசை.. சொல்லவே வேண்டாம் இளையராஜாவின் இசை குறிப்பாக பின்ணனி இசை இந்த படத்தை  அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.


கமலஹாசனின் திரை உலக வாழ்க்கையை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று பிரிக்கலாம் என்று   சொல்வார்கள். பிரமாதமாக நடித்திருக்கிறார். மகன் இறந்து விட்டான் என்னும் செய்தியை அவர் அறிந்து கொள்ளும் அந்த காட்சி.. "என்ன ஆச்சு? யாருக்காவது அடி பட்டு விட்டதா?" என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வருவார் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் கோலி என்பவர், "மை சன் இஸ் யுவர் சன்" என்றதும் ஏதோ புரிய எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பாரே? அப்பா! அதற்குப் பிறகு அந்த நடை.. ஓ மை காட் !

அதே போல அவருடைய நண்பன் செல்வாவை கைது
செய்து அழைத்துச் சென்றிருப்பது தன் மகளின் கணவன் தான் என்பது தெரியாமல் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று நினைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று அங்கே புகைப்படத்தில் தன் மகளோடு அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் இருக்கும் போட்டோவை பார்த்து அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன்.. அங்கே அந்த குழந்தையின் குரலை கேட்ட பிறகு ஒரு முறை பார்க்கிறேன் என்று  வசனம் இல்லாமல் அவர் மகளிடம் கண்களால் இறைஞ்சும்  அந்த காட்சி... ப்பா! என்ன நடிகன்!  செல்வா ரோலுக்கு ஜனகராஜ் தவிர வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை. Krithika was brilliant!

வேலு நாயக்கர் நீலாவை(சரண்யா) மணந்து கொள்ளும் காட்சியும், அவருடைய மகன் அவரை மிமிக் பண்ணும் விளையாட்டு  காட்சியும் ரசனையான கவிதைகள்!

"அந்தி மழை மேகம்.." பாடல் தேவையில்லை என்று தோன்றுகிறது ஆனால் துணை நடிகைகளின் பருத்த தொடைகள் வியாபாரத்திற்கு
உதவுமோ என்னவோ?

போலீஸ் கமிஷனரே வேலு நாயக்கரிடம் உதவி கேட்டு வருகிறார் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

விபச்சார விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை அத்தனை சுளுவாக திருமணம் செய்து கொண்டு விட முடியுமா என்னும் கேள்வியும் எழும்புகிறது?

படம் முழுவதும் கமல்ஹாசன் தான் ஆனால் உறுத்தவில்லை இந்த படத்தை பார்க்கும் பொழுது தேவையில்லாமல் 'தக் லைஃப்' நினைவிற்கு வந்து தொலைகிறதே?

Wednesday, October 15, 2025

ஹ்ருதயபூர்வம்(மலையாள திரைப்படம்)

  ஹ்ருதயபூர்வம்(மலையாள திரைப்படம் 


லன்ச் பாக்ஸ் என்னும் உணவகம் நடத்தி வரும் பிரும்மச்சாரியான மோகன்லாலுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட,  மூளைச்சாவ அடைந் ஏர்ஃபோர்ஸ கர்னல ஒருவரின இதயத்த பொருத்துகிறார்கள. தந்த மீத அதி பாசமா இருந் அவருடை மகள(மாளவிக மோகனன) தன்னுடை நிச்சயதார்த்ததிற்க தந்த ஸ்தானத்தில கண்டிப்பா  வேண்டும என்ற மோகன்லாலுக்க அழைப்ப விடுக் தன உதவியாளரோட புன செல்கிறார. அங்க கடைசி நிமிடத்தில நிச்சயதார்த்தத்த மாளவிக நிறுத்திவி, அங்க ஏற்படும கலாட்டாவில மோகன்லாலுக்க முதுகில அடிபட்டுவி, அவர இரண்ட வாரங்கள பயணம செய்யக கூடாத ன்ற அறிவுறுத்தப்ப புனேயிலேய அவர இரண்ட வாரங்கள தங் நேரிடுகிறத. ந் காலகட்டத்தில அவருக் மாளவிக தன்ன காதலிக்கிறார என்ற தோன் லேசா தடுமாறுகிறார. மாளவிகாவின தாயா வரும  சங்கீத தன கணவரிடம இல்லா மென்மை இவரிடம கண்ட இவர்பால ஈர்க்கப்ப, இவருடை உதவியாளரம்மாவ? பெண்ண? என்ற கேட்கிறார. இந் தர்மசங்கடத்த மோகன்லால எப்படி சமாளித்தார? என்ப நகைச்சுவையோட சொல்லியிருக்கிறத இந்தப்படம 

கொஞ்சம்கூட ஆரவாரமிலாமல் மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார் லாலேட்டன்பல காட்சிகளில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் பிரமாதம்நான் சாதாரணமாகவே மோகன்லாலின் ரசிகைஇந்தப் படம் பார்த்த பிறகு பரம ரசிகை ஆகி விட்டேன்மாளவிகா மோகனன்..இதற்கு முன் இவரை சில தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கிறோம்அழகாக இருப்பதோடு கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்இந்தப் படத்தை பொருத்தவரை யாருமே பெரிதாக கஷ்டப்பட்டு நடிக்கத் தேவையில்லைஅதுவும் மலையாளப் படம்சொல்லணுமாஇருந்தாலும் மோகன் லாலின் உதவியாளராக வரும் சங்கீத் பிரதாப் கலக்கல் 

நிச்சயதார்த்ததின் பொழுது வரும் பாடல் சிக்க வைக்கிறதுபுனேயின் அழகை படம் பிடித்திருக்கிறது காமிரா. அந்த சண்டைக் காட்சியை மறந்து விடலாம். சத்யன் அத்திக்காட்டின் இயக்கத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படம்