கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 31, 2019

என்னைக் கவர்ந்த திருப்பாவை எல்லே இளம் கிளியே ...

என்னைக் கவர்ந்த திருப்பாவை 
எல்லே இளம் கிளியே ...





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது! 

16 comments:

  1. அந்த அழகுத்தமிழுக்கு மயங்காதவர் யார்? ஆண்டாள் நம் அனைவர் மனதையும் ஆண்டாள். ஆண்டு கொண்டிருப்பாள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆண்டாளின் பாசுரங்களையும், திருவெம்பாவையையும்  இளைய தலைமுறைக்கு சுவைக்க கற்றுக் கொடுத்து விட்டால் போதும், தமிழ் தழைக்கும்.

      Delete
  2. திருவெம்பாவை விளக்கம் அழகு. அதற்குள் திருவெம்பாவை தொடங்கிவிட்டதே..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் குழம்பி விட்டீர்களோ? புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. கொஞ்சம் குழம்பி விட்டீர்களோ? புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. பார்ட்டி மயக்கமா? என்று கேட்காத தோன்றுகிறது, சே! சே! அதிரா பசும்பொன் ஆயிற்றே அதெல்லாம் இருக்காது. 

      Delete
    2. >>> பார்ட்டி மயக்கமா?.. <<<

      அதெல்லாம் இல்லை..

      வெறும் ஆப்பிள் ஜூஸ்தான்!...

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது திருவெம்பாவையில் ஒரு பாடல்தானே..

      Delete
    4. ஹையோ, ஹையோ, திருப்பாவை ஆண்டாள் அருளிச் செய்தது, முழுக்க முழுக்கக் கண்ணன் மேல் பாடியவை. திருவெம்பாவை மாணிக்கவாசகர் அருளியது. முழுக்க முழுக்க சிவனையும் அவன் அருளையும் நினைத்து நினைத்து ஓர் பெண்ணாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு பாடியவை! பாடிய இடங்களும் வெவ்வேறு. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் எனில் மணிவாசகர் திருப்பெருந்துறையில் பாடினார்.

      ஆண்டவா! இவங்க தமிழிலே "டி" எல்லோ என்பதை இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுமையாகப் பொறுத்துப்பேன். இப்போவே இங்கே வீட்டுக்குப் பின்னால் இருக்கும் நதியிலே போய் விழலாம்னா குளிர் ஜாஸ்தியா இருக்கே! என் செய்வேன்! :P:P:P:P

      Delete
  3. ஹூம், ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் தான் வித்தியாசம் தெரியலைன்னா இப்போத் திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்குமா? இந்த அழகிலே எனக்குத் தமிழிலே "டி" எல்லோ! யாரானும் உங்களை என்ன "டி" எனக் கூப்பிட்டதைத் தமிழிலே "டி" என்று சொல்லி இருக்கீங்களோ?

    ReplyDelete
  4. ரசனையை ரசித்தேன்.

    ReplyDelete
  5. அருமை...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தங்களைக் கவர்ந்தது எல்லே... இளங்கிளியே என்றால்
    என்னைக் கவர்ந்தத திருப்பாடல்

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!...

    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
    Replies
    1. //என்னைக் கவர்ந்தத திருப்பாடல்

      ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!...//
      காரணத்தோடு விளங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

      Delete
    2. தங்கள் அன்பினுக்கு நன்றி...

      இந்த மார்கழிக்குள்ளேயே விளக்கம் செய்வதற்கு முயற்சிக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      Delete
  8. மிகச் சிறப்பான விளக்கம் பானும்மா... உங்கள் குரலில் உங்களுக்குப் பிடித்த திருப்பாவை பாசுரம் பற்றி தெரிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete