கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 3, 2020

என்று தணியும் இந்த செல்ஃபி மோகம்?

15 comments:

  1. ரொம்பவே மோசமான பழக்கம் தான் இந்த செல்ஃபி - மோகம் தலைவிரித்து ஆடுகிறது. சமீபத்தில் பள்ளி மாணவர்களின் ஆண்டுவிழா ஒன்றில் நடிகர்/பாடலாசிரியர் வர, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள அப்படி ஒரு போட்டி. எப்படிச் சொன்னாலும் இவர்களுக்குப் புரியவைக்க முடிவதில்லை.

    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது இப்படித்தான் பலரும் விழாவில் பங்கு கொண்ட முக்கிய பேச்சாளர் பேசிக் கொண்டிருந்த போது அதை கவனிக்காமல் சப்தமாகப் பேசிக் கொண்டும், தூரத்தே வரும் அவரது உறவினர்களை ஒவ்வொருவராக சப்தமாக அழைத்துக் கொண்டும் ரொம்பவே படுத்தினார். நான் கொஞ்சம் சும்மா இருங்களேன் என்று சொன்னதற்கு என் மீது கோபம் கொண்டு - உங்களுக்குப் பிடிக்கலைன்னா தள்ளிப் போங்க என்று சொல்லி சண்டைக்கு வந்தார்.

    என்று தணியும் இந்த செல்ஃபி மோகம் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. சாதாரணமாக சுருக்கமாக பின்னூட்டமிடும் வெங்கட் இந்த முறை சற்று நீண்ட பின்னூட்டமிட்டிருப்பதிலிருந்தே உங்களுக்கு எத்தனை எரிச்சல் என்று புரிகிறது. நன்றி. 

      Delete
  2. இது வரையிலும் நான் என்னை செல்ஃபி தனியாகவோ யாருடனுமோ எடுத்துக்கொண்டதே இல்லை. இப்போக் காணொளி காண முடியலை! நாளைக்குப் பார்க்கிறேன். செல்ஃபி மோகத்தினால் புனேயில் லோனாவாலாவில் தேன் நிலவு சென்ற தம்பதிகள் இறந்தது குறித்தும் இன்னும் சிலர் கணவன், மனைவியாகவோ தனியாகவோ இறந்ததும் பற்றிப் பத்திரிகைச் செய்திகள் மூலமும் தொலைக்காட்சி மூலமும் பார்த்தேன், படித்தேன். செல்ஃபி வேண்டாம்னு சொல்றவங்க தான் இப்போ வேண்டாதவங்க. முகநூலில் இரவு பனிரண்டு மணி ஒரு மணி வரை உட்காராதீர்கள்னு சொல்லப் போகக் கெட்ட பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டேன். :)))))

    ReplyDelete
    Replies
    1. //இரவு பனிரண்டு மணி ஒரு மணி வரை உட்காராதீர்கள்னு சொல்லப் போகக் கெட்ட பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டேன். :))))) // அதனால் பரவாயில்லை, கெட்டதை கெட்டது என்று சொல்ல  சிலர் வேண்டும். தொடரட்டும் உங்கள் தொண்டு. காணொளியை பார்த்து விட்டு மீண்டும் வாருங்கள். நன்றி. 

      Delete
  3. அன்பு பானுமா.
    அருமையான செய்தியைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
    மிகத் தேவையான பதிவு.
    நீங்கள் சொல்லும் குழுவுக்கு எப்போதாவது போய்ப் பார்ப்பேன்.

    ஏன் இந்த பட மோகம்.? தன்னையே நினைத்து அக்கம் பக்கத்தை
    மறப்பவர்களை என்ன வென்று சொல்வது.
    சுயதம்பட்டம், சுய நலம் எல்லாமே கண்டிக்கத் தக்கவை.
    சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். யார் காதிலயாவது விழுந்தால்
    நல்லது.
    மிக மிக நன்றி மா.அழுத்தமாகக் கரிசனத்துடன் சொல்லி இருக்கிறீஈர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். யார் காதிலயாவது விழுந்தால்
      நல்லது.// நாம் ஊதுகிற சங்கை ஊதலாம், விடியும் பொழுது விடியட்டுமே. நன்றி.

      Delete
  4. எனக்கு இந்த செல்ஃபி சரியாக எடுக்க தெரியாது

    ReplyDelete
  5. மாறும் காலம் விரைவில் வரும்...

    ReplyDelete
    Replies
    1. மாற வேண்டியது செல்ஃபி மோகம் மட்டுமல்ல, பொது கூட்டங்களில் நடந்து கொள்ளும் முறையும் கூடத்தான். உங்கள் வாக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி. 

      Delete
  6. நேற்றே படித்துவிட்டேன் ஆயினும் கமெண்ட் போட நேரமில்லை!  செல்பி மோகம் - எல்லோரும்  ஒருவகையில் பிரபலமாக இருக்க ஆசைப்படுகிறார்கள் - ஓசி புகழிலாவது!

    ReplyDelete
  7. //எல்லோரும்  ஒருவகையில் பிரபலமாக இருக்க ஆசைப்படுகிறார்கள் - ஓசி புகழிலாவது!// ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். சபை நாகரிகமும் தெரிவதில்லை என்பதுதான் சோகம். நன்றி.

    ReplyDelete
  8. முதல்ல எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், மொபைல ச்விட்ச் ஆஃப் அல்லது ஏர்ப்ளேன் மோட்ல வைக்கணும். எந்தக் காரணம் கொண்டும், ஹெட் போன் இல்லாம, மொபைல்ல வெளில எங்கயும் காணொளி, பாடல்கள் எதையும் கேட்கக்கூடாது. ஒரு போன் வந்தால், உடனே தனியாகச் சென்று அதனை அட்டெண்ட் செய்யணும். இந்த பேசிக் விஷயங்கள் அனேகமா எல்லோருக்கும் தெரிவதில்லை. நாம் சொல்லவும் முடியாது. (இது என்ன உன்னோட ரயிலா ன்னு சொல்வானுங்க)

    ReplyDelete
  9. செல்ஃபி மோகம் என்பதைவிட, வியாதி என்று சொல்வது சரியா இருக்குமோ?

    (நான் பொதுவா காணொளி இடுகைகளைப் படிப்பதில்லை. அதுக்கு நேரமில்லை என்பதுதான் காரணம்)

    ReplyDelete
  10. காணொளி பார்த்தீர்களா? இல்லையா? குழப்பி விட்டீர்களே!! 

    ReplyDelete