கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 6, 2019

பெட்டர் ஹாஃப்

பெட்டர் ஹாஃப் 



மனைவியை பெட்டர் ஹாஃப் என்று சொல்வது பழக்கம். இது யாருக்கு ரொம்ப பொருத்தம் தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும்தான். ஒன்று என்னும் எண்ணை இரண்டு பகுதிகளாக  பிரித்தால் ஒரு பாதி .5, மறு பாதி .5 என்று பிரியும். இரண்டும் சமமாக இல்லாமல் ஒரு பகுதி .48 என்றும் மற்றொரு பாதி .52  என்று இருந்தால் இரண்டையும் .5 என்றுதான் எடுத்துக் கொள்வோம். ஆனாலும்  .48, .52 என்னும் இரு பாதிகளில் இரண்டாவது பெட்டர் இல்லையா? அதைப்போல மகா விஷ்ணுவையும், லக்ஷ்மி தேவியையும் எடுத்துக் கொண்டால் பெருமாளுக்கு செருக்கு, பரத்துவம் என்னும் குணங்கள் உண்டு. தாயாருக்கோ தண்டிக்கவே தெரியாது. கருணையே வடிவானவள். எனவே பெருமாள் .48 பாதியாகவும், தாயார் .52 என்னும் பெட்டர் ஹாஃப் ஆகவும் இருக்கின்றனர். 

- துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசத்தில் கேட்டது.



விகடர் என்று சொன்னாலே எல்லோருக்கும் வாரப்பத்திரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிகாசம்-கேலி, சிரிக்க சிரிக்க பண்ணுவதற்கு 'விகடம்' என்று பெயர் சொல்லுகிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். 'விகடகவி' என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணுபவரை சொல்கிறது. அந்த பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பி படித்தாலும் விகடகவி என்றே வரும். சாமர்த்தியமாக பேசி ஏமாற்று பண்ணுவது அகடவிகடம் என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருந்த சாமர்த்தியத்தில் சிரிக்கும்படியும் இருக்கும். 

சம்ஸ்க்ருத டிக்ஷ்னரியில் 'விகட' என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம்,தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும்படியாக ஏமாற்று சாமர்த்தியம் பண்ணுவது, இதெல்லாம்தான் விகடம். விதூஷகன்-காமிக் பாத்திரமென்று இந்நாளில் சொல்கிறார்கள் - அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷ்னரி அர்த்தப்படி 'ப்ரதிநாயகன்' அதாவது வில்லன் என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் - கோர ரூபத்தோடும்,குரூரமான காரியத்தோடும் இருப்பவன். 

-தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் 

அம்பிகையின் மூன்று வடிவங்களான மஹாகாளி, மஹா சரஸ்வதி, மஹா லட்சுமி குறித்து பாண்டிச்சேரி அன்னை கூறியுள்ளது. 


இந்த மூன்று வடிவங்களில் மனிதர்களுக்கு மிக நெருங்கி இருப்பவள் மஹா சரஸ்வதி. தன்னை மனிதன் அழைக்க மாட்டானா? என்று காத்திருப்பவள். ஒரு முறை அழைத்தாள்  போதும் ஓடி வந்து அருள் புரிவாள். எத்தனை தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் அவனுக்கு அருள் புரிந்து அவனை கை தூக்கி விடத்  துடிப்பவள்.

மஹாலக்ஷ்மியின் அருளுக்கு பாத்திரமாவது கடினம். அவளை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நழுவி ஓடி விட துடித்துக் கொண்டிருப்பாள். 

கருணை மிகுந்தவள் மஹா காளி, ஆனால் சிறு ஒழுங்கீனத்தையும் சகித்துக் கொள்ள மாட்டாள், தண்டித்து விடுவாள். 

இதை நாம் இப்படி புரிந்து கொள்ளலாம். எந்த தேர்வையும் எடுத்துக் கொள்ளுங்கள் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருந்தாலும், 100 மார்க் வாங்கினால்தான் தேர்ச்சி என்பது கிடையாது. குறைந்த பட்சம் 35 அல்லது நாற்பது வாங்கினால் போதும் பாஸாகி விடலாம். அது கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் அந்த தேர்வை நாம்தான் எழுத வேண்டும். நமக்காக மற்றவர்களை எழுதச் சொல்லக் கூடாது.  அப்படி செய்தால் மஹா சரஸ்வதி, மஹா காளியாகி விடுவாள்.  

சரஸ்வதி பூஜை அன்று கருணை வடிவான அன்னைக்கு நம் வணக்கங்கள்.


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் 
பண்கண்டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் 
கண்கண்ட தெய்வமுளதோ  சகல கலாவல்லியே 



22 comments:

  1. Replies
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. பெட்டர் காவ் நல்லாத்தான் இருக்கு.... நாளையுடன் நவராத்திரி முடியப்போகுதென நினைக்கக் கவலையாக இருக்கு:(

    ReplyDelete
    Replies
    1. ஏன் அதிரா சுண்டல் கிடைக்காதே? என்ற ஏக்கமா? ஹா!ஹா! வருகைக்கு நன்றி.

      Delete
  3. நல்லதொரு கதம்பம்.   நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் அருண்பாண்டியன் நடித்து விகடன் என்றொரு படம் வந்ததோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். 'விகடன்' என்னும் பெயரில் ஒரு படம் வந்தது. அதை தயாரித்து அதில் ஒரு வேடத்தில் அருண் பாண்டியன் நடித்திருந்தாலும் ஹீரோ ஹரிஷ் ராகவேந்திரா. சுமித்ராவின் மகள் உமா கதாநாயகி.  

      Delete
  4. பெட்டர் ஹாஃப்... நல்ல விளக்கம்.

    சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

    விகடம் குறித்த பரமாச்சார்யாரின் அருள் வாக்கு சிறப்பு.

    நல்லதொரு கதம்பம் பகிர்வு. நன்றி பானும்மா...

    ReplyDelete
  5. பானுக்கா இந்தக் கணக்கு வழக்கு எல்லாம் புரியறதே இல்லை..ஹிஹிஹி..எதுவா இருந்தாலும் அர்த்தநாரீஸ்வரர்! எல்லா இறைவனும் இறைவியும்!

    விகடர்/விகடகவி பெரியவரின் விளக்கம் மற்றும் தேவிகளைப் பற்றிய விளக்கம் சிறப்பு.

    //ஆனால் அந்த தேர்வை நாம்தான் எழுத வேண்டும். நமக்காக மற்றவர்களை எழுதச் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் மஹா சரஸ்வதி, மஹா காளியாகி விடுவாள். //

    ஹா ஹா ஹா சமீபத்திய செய்தியும் லிங்க் செய்து சூப்பர் பானுக்கா...

    எல்லாமே ரசித்தேன் கடைசிபாடலும்.

    கீதா


    ReplyDelete
    Replies
    1. //பானுக்கா இந்தக் கணக்கு வழக்கு எல்லாம் புரியறதே இல்லை..ஹிஹிஹி..//உங்களுக்கு ஒரு ரசியம் சொல்கிறேன் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இந்த கணக்கை சரியாகத்தான் சொல்லியிருக்கிறோமா என்று கால்குலேட்டரில் செக் பண்ணி விட்டுதான் பதிந்தேன். வருகைக்கு நன்றி

      Delete
    2. அது குமரகுருபரர் எழுதிய சகலகலாவல்லி மாலையின் கடைசி பாடல். 

      Delete
  6. மீண்டும் எழுதவந்தது ம்கிழ்ச்சி என்பெட்டெர் ஹாஃப் எல்லாவற்றிலும் பெட்டெர்

    ReplyDelete
    Replies
    1. //என்பெட்டெர் ஹாஃப் எல்லாவற்றிலும் பெட்டெர்// மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். வருகைக்கு நன்றி. 

      Delete
  7. அன்பு கீதா,
    இது ஒரு பொக்கிஷமான பதிவு தான். நீங்கள் ஸ்ரீரங்கம் சென்றது
    எங்களுக்கு எத்தனை அதிர்ஷ்டம் பாருங்கள். அருமையான படங்கள்.

    மாமனாரின் புத்தகங்கள் உங்களிடம் வந்தது அதிர்ஷ்டமே. என்னிடம் 1954
    ஆம் வருட விகடன் பைண்டிங்க் இருக்கு. கொஞ்ச நாட்கள் ஆனால்

    உதிர்ந்து விடும்.
    முன்பே பகிர்ந்திருக்கிறேன் முக நூலில்.என் பதிவுகளிலும் அப்போதுவந்த கதைகளைப் பதிவு செய்தேன் நல்ல வேளை.
    உங்கள் உத்சாகம் தொற்றிக் கொள்ளும் உத்சாகம்.
    இன்னும் வரும் பதிவுகளைப் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. அக்கா, தி.கீதாவுக்கு அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பி விட்டீர்கள். எனக்கான பதில் தி.கீதாவின் பதிவில் இருக்குமோ? 

    ReplyDelete
  9. ரேவதியின் கருத்து இடம் மாறி விட்டது போல! :) அருமையான பதிவு. மறுபாதி விளக்கம் அருமை. இதைப் படித்ததும் வைகுண்ட ஏகாதசியில் நம்பெருமாளின் மோகினி அலங்காரம் நினைவில் வருகிறது. கூடவே ஆழ்வார் சொல்லும், "எல்லாம் சரிதான் ஐயா! ஆனால் தாயாரின் அந்தக் கருணைக்கண்கள் உம்மிடம் இல்லையே!" என்னும் தைரியமான விளக்கமும் நினைவில் வந்தது. மூன்று தேவியரின் விளக்கமும் சகலகலாவல்லி மாலைப்பாடலும் சிறப்பு.

    ReplyDelete
  10. //இதைப் படித்ததும் வைகுண்ட ஏகாதசியில் நம்பெருமாளின் மோகினி அலங்காரம் நினைவில் வருகிறது. கூடவே ஆழ்வார் சொல்லும், "எல்லாம் சரிதான் ஐயா! ஆனால் தாயாரின் அந்தக் கருணைக்கண்கள் உம்மிடம் இல்லையே!" என்னும் தைரியமான விளக்கமும் நினைவில் வந்தது.// எனக்கும் அதுதான் நினைவுக்கு வந்தது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

    ReplyDelete
  11. மஹா பெரியவா வாக்கு ,அவருடைய பிள்ளையார் பற்று எல்லாமே

    மிகப் பிடித்த சேதிகள். துஷ்யந்த் ஸ்ரீதர்
    சொல்வதெல்லாமே ஜனரஞ்சகமாக இருக்கும்.
    பராசர பட்டர் சொன்ன மாதிரி தாயாரின் கருணா
    கடாக்ஷம், பெருமாள் கண்களில் கொஞ்சம் தேடவேண்டும்.
    அவன் துஷ்ட நிக்ரஹன் இல்லையா.
    நம் ராமன் கருணாகாகுத்தன்,.
    அத்தனை அயோத்தி மக்களையும் தன்னுடன் அழைத்துச் சென்ற
    காருண்ய மூர்த்தி.

    எல்லா குணங்களும் அவரவர் வளர்ப்புக்கு ஏற்ற வாகையில் அமைந்திருப்பதைப்
    பார்க்கலாம்.

    எங்கள் மாமனாரை நினைத்தாலே நிருசிம்ஹர் தான் நினைவுக்கு வரும்.
    எங்கள் வீட்டுக்காரரோ தன் அம்மாவின் குணம் படைத்தவர்.
    நல்ல நினைவுகளை மீட்டுக் கொடுத்த பானுத் தங்கச்சிக்கு
    நன்றி. வளமான எழுத்துகளை தினம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. அழகான பின்னூட்டத்திற்கு நன்றி. தினம் ஒரு பதிவா? முயற்சிக்கிறேன் அக்கா. 

    ReplyDelete
  13. ஸ்ரீ குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையுடன் பதிவு அருமை...

    மனதில் நிற்கக் கூடிய விஷயங்கள்...

    முப்பெருந்தேவியரைப் பற்றியது அன்னையின் அமுதவாக்கு..

    ஓம் சக்தி.. ஓம் சக்தி...

    ReplyDelete
  14. சரஸ்வதி தேவியின் அருள் எல்லோருக்கும் கிடைத்தால் எல்லாம் கிடைத்த மாதிரிதான்.
    அருமையான பதிவு.
    நவராத்திரி சமயம் உறவினர் வருகையால் கவனிக்காமல் விட்டு இருக்கிறேன் இந்த பதிவை.

    ReplyDelete