ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு
சென்ற வாரம் சனியன்று என் மகள் அவர்களின் நண்பர் மகளுக்கு வளைகாப்பு என்று அழைத்துச் சென்றாள். வளைகாப்பு பதினோரு மணிக்கு என்றிருந்தது. நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பத்தரை ஆகி விட்டது. ப்ரேக்ஃபாஸ்ட் முடிந்திருக்கும் என்று நினைத்தோம். முடியவில்லை.
ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டம்கள்: கருப்பட்டி ஹல்வா, சத்துரண்டை, வெஜிடபில் ரோல், முறுக்கு, நாடா தேன்குழல், மஃப்பின்ஸ், காபி, டீ, மற்றும் மேங்கோ ஜூஸ். இவ்வளவு பண்டங்கள் இருக்கும் என்பது தெரியாமல் வீட்டில் பேகல் சாப்பிட்டு விட்டதால் ஒரு வெஜ் ரோலும், அரை கப் காபியும் மட்டும் எடுத்துக் கொண்டேன்.
வளைகாப்பு முடிந்ததும் ஒரு மணிக்கு சாப்பாடு தயார். வெள்ளை அரிசி சாதம், சிவப்பு அரிசி சாதம் இரண்டுமே இருந்தன. தால், புளிக்குழம்பு போல ஒன்று, கத்தரிக்காய் வதக்கல், ரசம், மாங்காய் சாதம், பருப்பு வடை, உளுந்து வடை, இளநீர் பாயசம்(ஒரு காலத்தில் நம்மூரில் முழங்கிய இளநீர் பாயசத்தை இப்போது காண முடிவதில்லை) உருளை சிப்ஸ், அப்பளம்(இங்கு அப்பளத்தை முழுசாக பொரித்து வைக்காமல் உடைத்து விடுகிறார்கள்). மொத்தத்தில் சுவையான விருந்து. பஃபே முறை, உணவு வைத்திருந்த டேபிளுக்கருகில் ஏகப்பட்ட கும்பல், அதனால் புகைப்படமெடுக்க முடியவில்லை.
அங்கிருந்து நேராக மிஸிஸாகா சென்று விட்டோம். அங்கு அடுத்த நாள் ராதா கல்யாணம். முதல் நாளே தீப பிரதிஷ்டை செய்து, சில அஷ்டபதிகளை பாடி விடுவார்கள். நாங்கள் சென்ற போது பஜனை துவங்கவில்லை. வந்தவர்களுக்கு இரண்டு சமோஸா, டீ வழங்கிக் கொண்டிருந்தார்கள். நான் டீ மட்டும் எடுத்துக் கொண்டேன். பஜனை முடிந்ததும் ரெண்டு சப்பாத்தி, சப்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது.
கனடாவில்தான் இருக்கிறோமா? மேற்கு மாம்பலம் வந்து விட்டோமா? என்று சந்தேகமாக இருந்தது. அவ்வளவு மாமாக்கள், மாமிகள். பட்டுப்பாவாடை சட்டையில் பெண் குழந்தைகள், ஒட்டிக்கோ,கட்டிக்கோ வேஷ்டியில் ஆண் குழந்தைகள். தமிழ் பேச்சு. மறுநாள் பெரும்பாலான பெண்மணிகள் மடிசாரில் வந்திருந்தார்கள்.
ராதா கல்யாணத்திற்காக பருப்புத் தேங்காய், முறுக்கு, அதிரசம், மைசூர்பாக், திரட்டுப்பால் என்று பட்சணங்கள், மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கும், மணமகள் ராதைக்கும் வேஷ்டி,புடவைகள் வந்து குவிந்திருந்தன. அந்த சீர் சகையறாக்களை பெண்கள் processions போலகொண்டு சென்றது பார்க்க நன்றாக இருந்தது.
நான் சிறு வயதில் பார்த்த ராதா, சீதா கல்யாண உற்சவங்களில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் பங்கேற்பார்கள். இங்கு பெண்களும் பங்கேற்றார்கள். முத்து குத்துவது கூட பெண்களும் செய்தார்கள்.
காலையில் இரண்டு இட்லி, சாம்பார், சட்னி, காபி, டீ இருந்தது. இட்லி தீர்ந்ததும் குக்கீஸ், 1/2 வாழைப்பழம், காபி, டீ என்று வைத்து விட்டார்கள். காபி கடையில் சத்தம் அதிகம் இருந்ததால் அது பஜனை பாடுபவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் காபி ஜக்கை ஹாலுக்கு வெளியே வைத்து விட்டார்கள். லன்ச் - சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு கறி, சிப்ஸ், தயிர் சாதம் ஊறுகாய் என்று சிம்பிள் மெனு. கும்பல் அதிகம் என்று நினைத்ததாலோ என்னவோ, சாம்பார் சாதத்தையும், தயிர் சாதத்தையும் அளந்து ஸ்பூன் அளவிற்கு போட்டார்கள். எனக்கிருந்த பசியில் வெட்கத்தை விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பட்சணங்களை கொஞ்சம் கவரில் போட்டு எல்லோருக்கும் தந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது, சம்ப்ரதாய பஜனை பாடல்களில் இத்தனை பாடல்கள் எனக்கு நினைவில் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இரண்டு நாட்கள் முன்பு என் பேத்திகள் 'ஸ்லஷ்' குடிக்க வேண்டும் என்றார்கள். நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன். ஸ்லஷ் என்பது வேறு ஒன்றும் இல்லை, நம் ஊரில் ஐஸ் கோலா என்று துருவிய ஐஸில் வெவ்வேறு ஃப்ளேவர்களில் சர்பத்தை ஊற்றித் தருவார்களே அதுதான். குச்சிக்கு பதிலாக டம்ப்ளரில் வெவ்வேறு ஜுஸ்கள் கலந்த ஐஸ் துருவலை பிடித்து ஸ்டாரா போட்டு உறிஞ்ச வேண்டியதுதான்.
நேற்று அருகிலிருக்கும் புத்தர் கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்த உணவகத்தில் தாமரை மொக்கு போலிருந்த பீச் மூஸ்கேக், ஸ்டாராபெர்ரி ரோல் கேக், சாக்லேட் கேக், என்று ஆர்டர் செய்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டோம்.
அங்கிருந்த ஒரு கடையில் விதம்விதமான தேயிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஜாஸ்மின் டீ என்று ஒன்றை எங்களை முகர்ந்து பார்க்கச் சொன்னாள். பின்னர் எங்கள் எல்லோரையும் உபசரித்து உட்கார வைத்து பாலில்லா ஜாஸ்மின் டீ தயாரித்து எங்களுக்கெல்லாம் ஒரு சிறிய கப்பில் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொன்னாள். கொஞ்சமாக குடிக்கலாம். அவள் டீ தயாரித்த விதம் நளினமான நடன அசைவுகளைப் போல வசீகரமாக இருந்தது. சுவையான டீ தயாரிக்க வேண்டுமானால் தண்ணீரை 90°Cக்கு சூடாக்க வேண்டும். Not 100°C என்றாள்.
எங்களோடு வந்தவர் ஜாஸ்மின் டீ வாங்கிக் கொண்டார். அவர் காபியோ டீயோ குடிக்க மாட்டார், ஒருவேளை வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பாரோ என்னவோ.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் உ. தி. விழா பதிவுக்கு எசப்பதிவாக வந்த தங்களது பதிவும் அருமை.
/சென்ற வாரம் சனியன்று என் மகள் அவர்களின் நண்பர் மகளுக்கு வளைகாப்பு என்று அழைத்துச் சென்றாள்/
அங்கு சனிக்கிழமைகளில் வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவார்களா?
காலை சிற்றுண்டியும், மதிய சாப்பாடும் மெனு நன்றாக உள்ளது. பெரிய யானையடி அப்பளத்தை பாதியாக உடைத்து பொரிப்பது இயல்புதானே..! நானும் பெரிய அப்பளமாக இருந்து விட்டால், பாதியாகத்தான் பொரிப்பேன். குழந்தைகளுக்கு இரண்ட க கிடைத்ததென்ற சந்தோஷம் கிடைக்கும்.
தங்களின் விவரிப்பது, ராதா கல்யாணத்தை நேரில் பார்த்தது போல இருந்தது. சீர் பட்சணங்கள் கண்களை கவர்ந்தது.
தாங்கள் பேத்திகளுடன் சேர்ந்து குடித்த ஸ்லஷ் பானம் சுவை அருமை. நீங்கள் விவரித்து சொல்வதில் நானும் அந்த ஜுஸை குடித்தது போல உணர்ந்தேன்.
புத்தர் கோவிலுக்கு சென்ற போது சாப்பிட்ட உணவு வகைகளும் அருமை. மொத்தத்தில் சகோதரர் ஸ்ரீராம் தான் சுவைத்த உணவுகளை கூறி ஆவலை உண்டாக்கியது போல நீங்களும் எங்களது வயிற்றை சுவையான உணவுடன் நிரப்பி விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அங்கு சனிக்கிழமைகளில் வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவார்களா?// இந்த சந்தேகம் எனக்கும் வந்தது. இலங்கைத் தமிழர்கள் சனிக்கிழ்மைகளில் திருமணமே நடத்துவார்களாம். ட்ர்ம்ப் செகெரெட்டரி வந்து விளக்கினால் நன்றாக இருக்கும்.
Deleteஉங்களுடைய விரிவான பின்னூட்டம் எப்போதுமே மகிழ்ச்சியையும், உற்சாகத்தயும் தரும்.
Deleteஅப்பளத்தை பாதியாக பொரிப்பதில் தவறில்லை, தூளாக அல்லவா இருந்தது.
ஹா.. ஹா.. ஹா... எசப்பதிவு என்று சொல்லி சூப்பரா ஒரு பதிவு ரெடி பண்ணிட்டீங்களே....
ReplyDeleteபார்த்தீர்களா? உங்கள் ரெகுலர் பதிவைவிட இது கொஞ்சம் நீளமாய் வந்திருக்கிறது!
சாப்பாட்டு விஷயமாச்சே விட்டுக்கொடுத்துவிட முடியுமா? :))
Deleteபடங்கள் ஜோர். சரி, பஃபே இடத்தில் ஆட்கள் மறைத்திருந்தார்கள்.. தட்டில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்திருக்கலாமல்லோ!! அல்லது தட்டில் போடப்போகும்போதே ஒரு கையில் தட்டு மறுகையிலோ கேமிரா அதாவது செல் என்றிருக்க வேண்டும்!
ReplyDeleteசரிதான், ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று பேலன்ஸ் பண்ணத்தெரியாமல் என் தட்டு சாமான்களை பக்கத்தில் நிற்பவர் மீது கொட்டி, வாங்கி கட்டிக் கொள்ளவா?
Deleteமுறுக்கு வகையறா எல்லாம் அலர்ஜியாகி விட்டது. வாயில் கொழகொழப்பும், வயிற்றில் டம்மும் தருகின்றன என்பதால்! ஐஸ் துருவல் சுவாரஸ்யம்.
ReplyDelete90 டிகிரி டீ குறிப்பு கவர்கிறது! எப்படி வெப்பமானி வைத்து தொண்ணூறில் நிறுத்தி விடுவார்களா?
ReplyDeleteஆனால் மல்லிகை வாசனையில் டீ ?
கொஞ்சம் தள்ளியே நிற்கிறேன்!
100 டிகிரி என்பது கொதி நிலை, கொதிக்கும் முன் நிறுத்தி விட வேண்டும், டிகாஷன் போடவே தண்ணீர் கொதிநிலைக்கு போகும் முன் நிறுத்தி விட வேண்டும்.
Deleteமல்லிகை மணம் பஞ்சன்டாக அடிக்கவில்லை.
யெஸ் அதே அதே
Deleteகீதா
அட! உலகம் மிகச் சிறியதுன்னு அடுத்த ப்ரூஃப். அங்கு வரை கருப்பட்டி அல்வா வந்துவிட்டதே!!!!
ReplyDeleteகீதா
ஸ்ரீராம் மட்டும்தான் இத்தனை ஐட்டம்ஸ் சாப்பிட்டேன் ருசி பார்த்தேன்னு போடுவாரா என்ன நாங்களும் போட்டுவிடுவோமில்லை!!!! ஹூம் எனக்குத்தான் சமீப காலங்களாக வாய்ப்புகளே இல்லை.
ReplyDeleteஇளநீர் பாயசத்தை இப்போது காண முடிவதில்லை) //
ஹாஹாஹா அக்கா ஸ்ரீராம் பதிவில பார்த்திருப்பீங்களே....நாங்கலாம் இளநீர் ஜெல்லுக்கு மாறியாச்சு!!!!
கீதா
ஜூஸ், காஃபி, டீ எல்லாம் வைத்திருப்பதே அழகா இருக்கு. எல்லாமே செல்ஃப் சர்வீஸ்!
ReplyDeleteஅப்பளத்தை முழுதாக வைக்காமல் துண்டுகளாக்கிப் பொரிப்பது கூட ஒரு வகையில் நல்லதுதானோ என்று தோன்றும். நான் வீட்டில் செய்வதுண்டு. அப்ப நினைத்துக் கொள்வேன், விருந்துகளிலும் இப்படிச் செய்யலாமோ என்று.
//கனடாவில்தான் இருக்கிறோமா? மேற்கு மாம்பலம் வந்து விட்டோமா? என்று சந்தேகமாக இருந்தது.//
ஹாஹாஹா அக்கா, அமெரிக்காவிலும் இந்தியர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அமெரிக்காவைப் பார்ப்பதை விட இந்தியாவின் வாசனைதான் அதிகம் இருக்கும்.
நம்ம கோமதிக்காவின் மகன் இருக்கும் பகுதியிலும் (அரிசோனா) விழாக்கள் நிறைய நடக்கிறதே...துளசிக்கா போடும் பதிவுகளிலும் பார்க்கலாம். இந்தியாவை விட! இந்திய வாசனை தூக்கலாகவே இருக்கின்றன. அத்தனை இந்திய மக்கள் தொகை வெளிநாடுகளில் பெருகிவிட்டனர்.
கீதா
Coffee everywhere rocks!!! போல!!! சத்தம்!!!
ReplyDeleteபுத்தாலயங்களிலும் சாப்பாடு! இஸ்கான் போன்று.
ஆமாம் அவர் சொல்வது போல், டீ யானாலும் சரி (பாலில்லாத டீக்குச் சொன்னேன். பால் டீ அல்ல), காஃபினாலும் சரி டிகாக்ஷனுக்குக் கொதிநிலை உச்சத்துக்குப் போகக் கூடாது. அதுதான் சுவை. குமிழ்கள் வரும் போதே நிறுத்திவிட வேண்டும்.
கீதா
கீதா நீங்கள் ரசித்த ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித் தனியாக கமெண்ட் போட்டிரெக்கிறீர்கள்:)) மிக மிக நன்றி. நான் மொத்தமாக ஒரே ஒரு நன்றி போட்டு விட்டேன்.
Deleteஅனைத்தும் அருமை. படங்களும் அழகு. இட்லி, தோசை விரைவில் தீர்ந்துவிடும் . இட்லி, தோசை பிரியர்கள் அதிகம்.
ReplyDeleteஎல்லா விழாக்களியயும் நம் நாடு போல அங்கும் சிறப்பாக செய்வதால் இங்கிருந்து போகும் பெரியவர்களுக்கு(பெற்றோர்களுக்கு) பொழுது போகிறது நல்லபடியாக மகிழ்வாக.
நன்றி கோமதி அக்கா. ஆமாம். வந்ததிலிருந்து எல்லா வார இறுதியிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி.
ReplyDelete