கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 6, 2018

வரமா சாபமா?

வரமா சாபமா? 

சமீபத்தில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விஷயம் ஸ்ரீதேவியின் மரணம். வாழ்ந்த பொழுது எப்படி ஊடகங்களை ஈர்த்தாரோ, அதே அளவு, ஏன் அதை விட அதிகமாக ஊடகங்களை ஈர்த்தார். 

எத்தனை எத்தனை விமர்சனங்கள்?  எத்தனை யூகங்கள்? அவர் மரணத்திற்கு காரணம் அழகை பாதுகாக்க அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், அவர் அருந்தியிருந்த மது, என்றெல்லாம் ஹேஷ்யங்கள்.  மது விஷயம் வெளி  வந்ததும் அவர் மீதிருந்த அனுதாபம் கொஞ்சம் குறைந்தது. மீம்ஸ்கள் அதிகரித்தது. இவைகளை கண்டித்தும் பலர் பதிவிட்டனர். 

ஒருவர், "எத்தனையோ பிரபலங்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனர். ஆனால் அவர்களெல்லாம் ஆண்கள் என்பதால் அவர்களின் அந்த பழக்கத்தை கண்டித்து எந்த செய்தியும் வந்ததில்லை. ஸ்ரீதேவி பெண் என்பதால் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஆணாதிக்க மனப்பான்மை" என்று எழுதி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் இவர்? ஆண்கள் செய்யும் எல்லா  அபத்தங்களையும் பெண்களும் செய்வதுதான் பெண் விடுதலையா?






இருக்கட்டும். அழகு என்பது ஆண்டவன் அளிக்கும் அன்பளிப்பு என்று கூறுவார்கள். ஆனால் ஸ்ரீதேவி மட்டுமல்ல, ஜெயலலிதா, டயானா சார்லஸ், மார்லின் மன்றோ போன்ற அழகிகளின் வாழ்க்கையின் சோகமும், அவர்களின் மரணத்தின் மர்மமும் எப்போதோ படித்த ஒரு புது கவிதையை நினைவூட்டுகின்றன. 

இங்கே 
வரங்களே சாபங்களானால்
தவங்கள் எதற்காக? 

8 comments:

  1. ஊடகங்களும் வரன்முறை மீறி நடந்து கொண்டதாக மனதிற்குப் படுகின்றது...

    ReplyDelete
  2. பாவம். அவர் அழகு அவருக்கு செல்வத்தை வாரிக் கொடுத்திருக்கலாம். நிம்மதியை எடுத்துக் கொண்டுவிட்டது. இன்னும் கொஞ்ச நாள் அவர் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் மனதில் தோன்றுவதே அவர் வாழ்க்கையின் வெற்றி.

    ReplyDelete
  3. ச்நந்தா மறைவு நினைவுக்கு வரவில்லை இதெல்லாமூடகங்களுக்குத் தீனி

    ReplyDelete
  4. இப்போது ஊடகங்களுக்கு எல்லாமே டி.ஆர்.பி. சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் அதே நோக்கில் தான் பார்க்கிறார்கள். மரணம், கொலை எல்லாமே அவர்களுக்கு செய்தி தான்! என்ன சொல்ல.

    ReplyDelete
  5. ஶ்ரீதேவிக்கு மது அருந்தும் வழக்கம் இல்லை என்றே கேள்வி. எப்படியோ போயாச்சு! இனி என்ன?

    ReplyDelete
  6. நடிகையின் மரணம் தொடர்பான தொடர் நிகழ்வுகள் ஊடகங்களால் கையாளப்பட்ட விதம் சற்றே சிந்திக்கவைத்துவிட்டது.

    ReplyDelete
  7. லிஸ்டில், சில்க் ஸ்மிதா, திவ்யபாரதி (ஸ்ரீதேவியின் டூப்ளிகேட். தமிழிலும் நடித்திருக்கிறார்), ப்ரணிதா, சிம்ரனின் தங்கை போன்ற பலர் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  8. எப்போதுமே பிரபலங்களின் ஒரு சில விஷயங்கள் அவர்கள் இருக்கும் போது பேசப்படுவதை விட இறந்த பிறகு பேசப்படுவதுதான் அதுவும் எதிர்மறைகள் ...கொடுமை...நம் ஊடங்கங்களும் சரி அதை நல்ல வியாபாரமாக்குகின்றன...இல்லாததை எல்லாம் தலைப்பாக வைத்து...பலருக்கும் அழகு எதை எதையோ கொடுக்கிறது ஆனால் எது முக்கியமோ அந்த மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை...

    கீதா

    ReplyDelete