கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 6, 2018

புரியாத புதிர்


புரியாத புதிர்

ஒரு சுபயோக சுப தினத்தில் ராகவனும்,சித்ராவும் தங்கள் பெண் கீர்த்தனாவிற்கு வரன் தேடலாம் என்று முடிவு செய்து, பெண்ணிடம் அதற்கு உத்தரவு கேட்க, அவளும் இயர் ஃபோன் மாட்டியிருந்த செவிகளோடு கூடிய தலையை மேலும் கீழுமாக ஆட்ட, குடும்ப ஜாதக நோட்டிலிருந்து கீர்த்தனாவின் ஜாதகத்தை காபி எடுத்து, நான்கு மூலைகளிலும் குங்குமம் தடவி, பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து, பிரபலமான மேட்ரிமோனியல் சைட்டில் பதிவு செய்தர்கள்.

அவர்கள் வீட்டுக்கு வந்தவுடனேயே இரண்டு ஃபோன் கால்கள் வந்து விட்டன. பெண்களுக்கு இத்தனை டிமாண்டா என்று நினைத்துக் கொண்டார்கள். தினசரி நான்கு அழைப்புக்களாவது வரும். எல்லாவற்றையும் சித்ரா தனியாக ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டு, தன் வேலைகளை முடித்தவுடன் கணிணியில் தேடத் துவங்குவாள்.

“இந்த பையனை பார்க்கலாமா?”

“ஏழு வயசு வித்தியாசமா? போம்மா..”

“அதுனால என்னடி? வயசு வித்தியாசம் அதிகம் இருந்தால், பாவம் சின்ன பொண்ணுனு விட்டுவிடுவார்கள்..”

“உனக்கும், அப்பாவுக்கும் ஏழு வயசு வித்தியாசம்… அப்பா அப்படி விடறாளா?

“எஸ், நோ”

“அப்புறம் ஏன் பேசற? ஏழு வயதெல்லாம் ரொம்ப அதிகம். ஜெனரேஷனே மாறிப் போயிடும்.”

“அப்போ எவ்வளவு வயசு வித்தியாசம் பார்க்கலாம்?”

“மூணு, இல்லாட்டி, நாலு”

அதன்படி தேடத் தொடங்கினாள்.

“இந்த பையன் எப்படி?”

“என்னமா? மேல் மாடி மொட்டையா இருக்கு?”

“வெளியில்தான் மொட்டை, உள்ள நிறைய விஷயம் இருக்கு, தவிர, இப்போ மொட்டை ஃபேஷன்தானே..?”

“வெய்டிங் லிஸ்டில் போடு, தலையில் முடி இருக்கும் பையன் கிடைக்கவில்லலைனா பார்க்கலாம்..”

தலை நிரைய முடியோடு இருந்தவனுக்கு சம்பளம் போதாது என்றாள்.

“நேற்று ஒரு மாமி ஃபோன் பண்ணினார், அவா பையன் எம்.பி.ஏ. படிச்சுட்டு…”

“எம்.பி.ஏ. என்றால், எந்த பி.ஸ்கூல்னு கேளுமா.. ஐ.ஐ.எம்., ஒகே..! ஏதோ காமா சோமா காலேஜ் எல்லாம் வேண்டாம்.” என்றான் மகன்.

“சொந்த வீடு வேண்டாமா?” என்றார் மாமியார்.

ஒரு வரன் எல்லாம் பொருந்தி அவர்கள் வீட்டிற்கு சென்றர்கள். அம்பத்தூர் தாண்டி, ஒரு சிறிய அபார்ட்மெண்ட்.

“ரோட் அப்ரோச் சரியில்லை, மழை நாளில் ஒரே சேறும் சகதியுமாக இருக்கும். வீடு ரொம்ப சின்னது, இதில் நம்ம கீது போய் எப்படி இருக்கும்? வேறு இடம் பார்க்கலாம் மன்னி” என்றாள் நாத்தனார்.

இப்படி ஏகப்பட்டதை கழித்து கட்டினார்கள். சிலவற்றை ஜோதிடர் பொருந்தவில்லை என்று சேர்க்க மறுத்தார். இவர்களுக்கு பிடித்த சில இடங்களிலிருந்து பதில் ஏதும் வராமல் சோதித்தது.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது. கீர்த்தனாவுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கேயே இருக்கும் பையனாக பார்க்கலாம் என்று வெளிநாட்டு வரன்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.

ஒரு நாள் ஸ்கைப்பில் வந்த மகள், “அம்மா, ஒரு நிமிடம்” என்றாள் பின்னர், “ஹி இஸ் முரளி, என்னோட டீம் லீடர்” என்று காமிராவை திருப்ப, “ஹலோ ஆண்டி, என்று புன்னகைத்த இளைஞன் நிறம் குறைவா? அல்லது வெளிச்சம் அவன் மீது படவில்லையா? என்று தெரியவில்லை.

சிறிது நாட்கள் கழித்து கீர்த்தனா அந்த முரளியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பது தெரிந்து, முடிவானது. அவர்கள் வீடு மயிலாப்பூரில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு எதிரே ஒரு சந்தில், கம்பி கேட் போட்ட பழங்கால வீடு.

“முரளி ஓ.எம்.ஆரில் த்ரீ பெட் ரூம் அபார்ட்மெண்ட் புக் பண்ணியிருக்கிறான். செப்டம்பரில் பொசஷன் கிடைத்து விடும். அப்புறம் அங்கே போய் விடுவோம்.”

தலை பின்னோக்கி செல்ல துவங்கி விட்ட, வெறும் பி.டெக். மட்டுமே படித்த, தன்னை விட எட்டு வயது மூத்த பையனை மணந்து கொள்ள தன் மகள் எப்படி முடிவு செய்தாள் என்பதை மட்டும் சித்ராவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.    

21 comments:

  1. ///தலை பின்னோக்கி செல்ல துவங்கி விட்ட, வெறும் பி.டெக். மட்டுமே படித்த, தன்னை விட எட்டு வயது மூத்த பையனை மணந்து கொள்ள தன் மகள் எப்படி முடிவு செய்தாள் என்பதை மட்டும் சித்ராவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. //

    இதுதான் காதல் என்பதோ?:) காதலுக்குக் கண்ணில்லையாமே?.. ஹா ஹா ஹா..

    மனங்கள் இணைய முன்னர்தான்.. புற அழகும் பிற விஷயங்களையும் ஆராயும்..

    முதலில் மனங்கள் இணைந்து விட்டால், பின்பு அத்தனையும் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடும்...

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ இங்கின அதிராதான் 1ஸ்ட்டூஊஊஊ:)).

      Delete
    2. //முதலில் மனங்கள் இணைந்து விட்டால், பின்பு அத்தனையும் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடும்..//

      அடடே... இப்போதான் உங்க பின்னூட்டம் படிக்கிறேன். இதையே நானும் சொல்லி இருக்கேனே.. அப்போ நானும் ஞானியா?!!

      Delete
    3. வாங்க, அதிரா, காதலுக்கு கண் கிடையாது, பகுத்தறிவையும் கொஞ்சம் பின் தள்ளி விடும் போலிருக்கிறது.நன்றி!

      Delete
    4. // இதையே நானும் சொல்லி இருக்கேனே.. அப்போ நானும் ஞானியா?!!// நீங்கள் மட்டும் இல்லை, இன்னும் இரண்டு,மூன்று பேர் இருக்கிறார்கள்.

      Delete
    5. ஹையோ வெற்றி வெற்றி வர வர என் ஆச்சிரமத்துக்கு ஆட்கள் கூடிக்கொண்டே வருகிறார்கள்:)) ஹா ஹா ஹா..

      Delete
  2. ம்ம்ம்... முரளியுடன் பழகத் தொடங்கியதும் - அதுவும் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருக்கும்போது - இவன் தேவலாம், ஒத்து வருவான் போலிருக்கே என்று தோன்றி இருக்கும். மனத்துக்குப் பிடித்துவிட்டால் கண்டிஷன்கள் பறந்து விடுகின்றன!

    ReplyDelete
  3. இருமனம் ஒருமனமானால் திருமணம். :)))) அழகெல்லாம் தேவையே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா அக்கா, உங்களுக்கும், ஸ்ரீராமுக்கும் சேர்த்து சொல்கிறேன். நான் சொல்ல நினைத்தது அரேன்ஜ்ட் மேரேஜ் என்னும் பொழுது ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கும் பெண்கள், காதல் திருமணத்தில் அத்தனையையும் புறம் தள்ளி விடுகிறார்களே என்பதுதான். அதை pungent ஆக கொள்ளவில்லையோ?

      Delete
  4. புரிந்து கொள்வது என்பது இயலாதுதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார். "இந்த மாதிரி ஒரு கல்யாணம் செய்து கொண்டு விட்டாளே..என்று பல தாய்மார்கள் புலம்பி கேட்டிருக்கிறேன். நன்றி.

      Delete
  5. Replies
    1. வாங்க சார். வெளி மனிதர்களுக்கு புரியும், நெருங்கிய உறவினர்களுக்கு புரிய நாளாகும். வருகைக்கு நன்றி!

      Delete
  6. சில விஷயங்களை புரிந்து கொள்வது கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அக்கா. திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு சொன்னதையே உங்களுக்கும் பதில் ஆக்குகிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  7. இது பக்குவப்பட்ட வயதில் பக்குவப்பட்ட மனதும் சேர்ந்து எடுத்த முடிவு :)
    ஒருவேளை அருகில் இருந்து பழகும்போது முரளியின் நல்ல குணங்கள் கீர்த்தனாவை கவர்ந்திருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர்கள் வரன் பார்க்கும் பொழுது எந்த வித சமரசத்திற்கும் ஒப்புக் கொள்ளாத பெண்கள், தாங்களாக பார்த்துக் கொள்ளும் பொழுது, பலவிதங்களில் வீட்டுக் கொடுக்கிறார்களே என்பதுதான் என்னை வியக்க வைக்கிறது. நன்றி ஏன்ஜெல்.

      Delete
  8. எனக்குத் தெரிந்த ஒரு வரன் திருமணத்துக்கு முன்பே மூன்றுபெட் ரூம் வீடு வாங்கி எல்லாப் பொருட்களும்வாங்கி வைத்தாராம் மணம்முடிந்தசில நாளில் மனைவிக்கு ஏதோ அஃப்ஃபேர் இருப்பதுதெஇந்து கணவன் விசாரிக்க அந்தப்பெந்தன் அம்மாவிந்துணையோடுகாதலனிடமே சென்று விட்ட்டாளம் புரியத புஹிர்களில் இதுவுமொன்று

    ReplyDelete
    Replies
    1. இப்படி எத்தனையோ புதிர்களை கொண்டதுதான் வாழ்க்கை.வருகைக்கு நன்றி!

      Delete
  9. நிறைய எழுத்துப்பிழைகள் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. சாதரணமாக உங்கள் பின்னூட்டங்களில் எழுத்துப் பிழை இருக்காது. அதிராவுக்கு வரும் டங் ஸ்லிப் போல, இது ஃபிங்கர் ஸ்லிப். இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம்?

      Delete