கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 25, 2019

புராணங்கள் சொல்வது என்ன - 2

12 comments:

  1. இன்றைய காணொளியின் பேச்சுப்பொருள் சுவையானது, உபயோகமானது. நிறையச் சொல்லலாம்.

    ReplyDelete
  2. அரக்கர்கள், அசுரர்கள் என்பதற்கு நல்ல விளக்கம். நம் எல்லோரிடமும் இருக்கும் இந்த குணங்களை குறைத்துக் கொல்லப் பழகவேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  3. புஷ் பேக் சீட் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பயணித்த பஸ்ஸில் என் சீட்டில் இருந்த புஷ் பேக் உபயோகிக்கவே இல்லை. என் சீட்டின் பின்புறம் அமர்ந்திருந்தது ஒரு வயதான பெண்மணி. புஷ் பேக் போட்டால் அவருக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும் என்று எண்ணி நான் அதை உபயோகிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. புஷ் பேக் போட்டால் அவருக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும் என்று எண்ணி நான் அதை உபயோகிக்கவில்லை.

      Delete
    2. //புஷ் பேக் போட்டால் அவருக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும் என்று எண்ணி நான் அதை உபயோகிக்கவில்லை.//
      சுயநலத்தை தியாகம் செய்யும் நேரங்களில் நாம் தேவர்கள்தான். வாழ்க

      Delete
  4. பானுக்கா நேற்றைய காணொளியும் சரி இன்றையதும் சரி சூப்பர். (வால்யூம் இன்றும் கேட்கவில்லைதான். மிக மிக மெதுவாகக் கேட்கிறது எனக்கு. ஒரு வேளை எனது இயலாமை காரணமாக இருக்கலாம். ஆனால் இதுக்கு முன்னாடி போட்டது நன்றாகக் கேட்க்கும். மொபைலில் ஹெட்செட் போட்டுக் கொண்டால்)


    நேற்று கோபம் கண்ணை (மனக்கண்ணை/மூளையை) மழுங்கச் செய்யும். நான் அடிக்கடி சொல்லும் ஒன்று குடிகாரரும் கோபக்காரரும் ஒன்றேதான். அச்சமயத்தில் என்ன செய்கிறோம் என்ன் பேசுகிறோம் என்பதே தெரியாது. அப்புறம் தெளிந்ததும் வேறு...

    இன்றைய டாப்பிக்கும் அது போலவே மனிதன் பாதி மிருகம் பாதி என்பது ....அதில் மிருகத்தைக் கூடச் சொல்லக் கூடாதுதான்.

    நமக்குள்ளேயே அசுரனும்/அரக்கியும் உண்டு. மகன் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்பான் குறிப்பாகப் புராணக் கதைகள் சொல்லிய போது அப்போது நான் சொல்லியது இதுஹான் அதெல்லாம் குறியீடுகள். நம் மனதிற்குள் இருக்கும் கெட்ட குணங்கள். அதைக் கதைகள் மூலம் சொல்லியிருக்காங்க ஸ்வாரஸ்யமா இருக்கணுமே இல்லைனா நீ கூடக்கதை கேப்பியா ? நீ நல்லவனா இருக்கணும் பொறாமை கூடாது அப்படி இப்படினு உனக்கு அட்வைஸ் செஞ்சா உனக்குப் போரடிக்கும் இல்லையா. அதான் கதை மூலம்...இதோ அடுத்து வருகிறேன் மீதியும் கேட்டுவிட்டு

    கீதா

    ReplyDelete
  5. யெஸ் சுயநலம் என்பது அசுரத்தனம். நல்ல டாப்பிக் அக்கா.. புஷ்பேக் பற்றி சொன்னது மிகவும் சரியே. நானும் அதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் பயன்படுத்தினாலும் எஉழ்ம் போது அதை முன்னால் தள்ளி வைத்துவிட்டு. அது போல புஷ் டோர் நம் பின்னால் வருபவருக்காக கொஞ்சம் பிடித்துக் கொண்டுஅவர் அதைப் பிடிக்கும்போது நாம் முன் சென்றால் நலம் இல்லைனா சில சமயம் சில கதவுகளில் அந்த ஸ்ப்ரிங்க் சரியா இல்லைனா டக்குனு பின்னால் வருபவரின் முகத்தில் அடிக்க நேரிடும்.

    அது போல உணவகங்களுக்குச் சென்று விட்டு நாம் எழும் போது பின்னுக்குத் தள்ளும் நாற்காலியை மீண்டும் உள்ளே தள்ளி வைத்தல். ஏனென்றால் சில இடங்களில் உணவகங்கள் மிக நெருக்கமாக இருக்கும் நடப்பதற்கும் இடமில்லாலம்.

    வயதானவர்கள், லக்கேஜ் நிறைய வைத்துக் கொண்டு பஸ்ஸிலொ, ரயிலிலோ ஏற முற்படும் போது சிலர் இறங்கவோ ஏறவோ கிடைக்கும் கேப்பில் நுழைந்து ஏறுபவருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தி என்று...

    ட்ராஃபிக் எதிர் வரும் வண்டிகளுக்கு இடம் கொடுக்காமல் பலரும் முண்டியடித்துப் போகும் போது சிறிய சாலைகள் ஜாம் ஆகும். அப்போதும் கூட எதிர்வரும் வண்டிகளுக்கு இடம் கொடுக்காமல் கேப் எல்லாத்தையும் அடைத்துக் கொண்டு எதிர் வரும் வண்டிகள் நுழையக் கூட முடியாமல் ட்ராஃபிக் ஜாம் செய்யும் காமன்சென்ஸ் அல்லது சுயநலம் எந்தக் கோட்டையையோ பிடிக்கப் போவது போன்றவை

    இப்படி நிறையவே சொல்லலாம் அக்கா. எதிராளியின் ஷூக்களில் இருந்து யோசிக்காத தன்மை.

    கீதா

    ReplyDelete
  6. இரண்டுமே சூப்பர் பானுக்கா! அருமையான டாப்பிக்ஸ். அழகாவும் சொல்லறீங்க பானுக்கா.

    கீதா

    ReplyDelete
  7. வீடியோவும் பாதியாகத் தெரிகிறது. முழுதும் வரலை. குரல் கேட்கவில்லை. முந்தைய பதிவைப் போல் ஆடியோவும் பிரச்னை. எனினும் கருத்துகள் கொடுத்திருப்பதைப் பார்த்து அசுரர், அரக்கர் விளக்கம் எனப் புரிந்து கொண்டேன். புஷ் பேக் சீட் பத்தி ஏன் வந்ததுனு புரியலை. நான் அதைப் பயன்படுத்தியதே இல்லை. விமானப் பயணத்தில் கூட! மற்றபடி பேசுவது தவிர்த்து எழுத்திலும் பதிவைக் கொடுக்கலாமோ எனத் தோன்றுகிறது. என் போன்றவர்களுக்குப் புரியும். :(

    ReplyDelete
  8. இன்றைய சூழலுக்கு பொருத்தமான கருத்து ரசித்தேன்.

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி

    அருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள். சுயநலம் கொண்டோரின் புரிதல் தன்மை சற்று குறைவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு மனிதர்களும் தான், தனக்கு என எண்ணும் போது அங்கு மனித நேயங்கள் மரித்துப் போகிறது. அது அசுர குணத்திற்கு ஒப்பானது. மிகவும் நன்றாக உவமானத்தோடு சொல்லியுள்ளீர்கள். சென்ற பதிவும் பிருகு முனிவரின் கோபத்தால், அவரின் கர்வம் அவர் கண்ணை மறைத்தைப் பற்றியும் நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள். இரண்டுமே ரசிக்கும்படியாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete