கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 15, 2023

கனவு பலித்தது

 கனவு பலித்தது



என் படைப்புகளை புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஆனால் நமக்கு அது சாத்தியப்படுமா? என்று ஒரு சந்தேகம் அடி மனசில் இருந்து கொண்டே இருந்தது. நிச்சயமாக முடியும் என்று நம்பிக்கை தந்து குவிகம் பதிப்பகத்தை  திரு. ராய செல்லப்பா அவர்கள் அறிமுகம் செய்வித்தார்.  அதோடு மட்டுமல்லாமல் என் கதைகளில் வெளியிடக் கூடிய தகுதிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு, அவற்றில் சிறு திருத்தங்களும் கூறினார். 



என் தோழியான கீதா ரங்கன் ப்ரூஃப் ரீடிங் செய்து தர, நம் ரேவதி பாலாஜி அழகான அட்டைப் படம் வரைந்து தர, சகோதரர் அனந்த நாராயணன் அவர்களும், இனிய தோழியான ஆன்சிலா பெர்னாண்டோவும் அணிந்துரை எழுதித் தர, குவிகம் பதிப்பகம் தரமாக அச்சிட்டு என் கனவை நனவாக்கி விட்டார்கள். இதற்கு முன் நான்கு மின் நூல்கள் வெளியிட்டிருந்தாலும் நம் புத்தகத்தை அச்சில் பார்க்கும் பொழுது அலாதி சந்தோஷம்.  

உணவை சமைத்தால் மட்டும் போதுமா? எல்லோரும் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தானே சமைத்தவருக்கு சந்தோஷம். அதைப் போல் என்னுடைய இந்த நூலை நீங்கள் எல்லோரும் வாங்கி, படித்தால்தான் இந்த என் பணி பூரணமடையும். புத்தகத்தின் விலை பிரதி ஒன்று ரூ.100/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் என்னை 9841178728 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.  நன்றி. 



5 comments:

  1. இன்னும் எனக்கு என் பிரதி வரவில்லை.  பணம் அனுப்பினால்தான் வருமா?  புத்தகம் வந்தபின் பணம் அனுப்பலாமா? உங்கள் தற்போதைய அலைபேசி எண்ணிலேயே ஜிபே செய்யலாமா?

    ReplyDelete
    Replies
    1. //பணம் அனுப்பினால்தான் வருமா?// என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? பணத்தை விட உங்கள் விலாசம் முக்கியம். ஸ்ரீராம், சென்னை என்று போட்டால் வந்து விடுமா?

      Delete
  2. அக்கா மனமார்ந்த வாழ்த்துகள்! இப்புத்தகம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதோடு இதன் பின்னும் உங்கள் படைப்புகள் அச்சில் வர வேண்டும் என்பதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இதில் உங்கள் பங்களிப்பும் கணிசம். மிக்க நன்றி கீதா.

      Delete