கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 23, 2023

குழந்தை சொன்ன பொய்...

 குழந்தை சொன்ன பொய்...


சனிக்கிழமையன்று(17.6.23) தினசரியில் படித்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சியளித்தது. பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில் எட்டு வயது பெண் குழந்தை ஒன்றை வீட்டில் தனியாக விட்டு விட்டு, வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது, ஆன் லைனில் படிப்பைத் தொடர வேண்டும் என்று எச்சரித்து விட்டு அந்த்க் குழந்தையின் தாய் பள்ளியிலிருந்து மகனை அழைத்து வர சென்றிருக்கிறார்.

அம்மா அந்தப் பக்கம் சென்றதும், குழந்தை இந்தப் பக்கம் விளையாடுவதற்காக வெளியே ஓடி விட்டது. அம்மா, திரும்பி வந்த பொழுது வெளியே நின்று கொண்டிருந்த மகளிடம், “ஏன் வெளியே நிற்கிறாய்?” என்று கேட்ட அம்மாவிடம் உண்மையைச் சொன்னால் என்ன நடக்குமோ என்று பயந்த அந்தக் குழந்தை, அங்கு ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுக்க வந்த பையனை சுட்டிக் காட்டி, “இந்த ஆள் என்னை கடத்திப் போக முயற்சி செய்தான். அவனிடமிருந்து தப்பித்து இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறது, உடனே அந்தக் குழந்தையின் தாய், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த டெலிவரிபாயை அடித்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா ஃபுட்டேஜை பார்த்ததில் அப்படியோரு சம்பவம் நடக்கவில்லை, என்று தெரிந்திருக்கிறது. பிறகு அந்த்ப் பையனிடம் மன்னிப்பு கேட்டார்களாம்.

சாதரணமாக குழந்தைகள் பொய் சொல்லாது என்பார்கள். இந்தக் குழந்தை பொய் சொன்னது மட்டுமல்லாமல், தான் செய்த தவறை மறைக்க ஒரு பாவமும் அறியாத வெறொருவர் மீது பழி சுமத்தியிருக்கிறது. இதற்கு காரணம், அந்தக் குழந்தையை அதன் பெற்றோர்கள் விளையாடவே அனுமதிக்க மாட்டார்களாம். அதனால் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத பொழுது குழந்தை விளையாடுவதற்காக வெளியே ஓடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அன்று அம்மாவைப் பார்த்ததும் பயத்தில் அந்த டெலிவரி பாய் மீது அபாண்டமாக பழி சுமத்தி விட்டது. இதில் அந்த்க் குழந்தையை விட, அந்த தாயின் மீதுதான் அதிகம் தவறு இருப்பதாத தோன்றுகிறது. குழந்தை பருவத்தில் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். அதற்கு அனுமதிக்காமல் இருப்பது சரி இல்லை. சாப்பாடு, தூக்கம், படிப்பு, இதர ஆக்டிவிடீஸ் எவ்வளவு அவசியமோ அவ்வளவு விளையாட்டும் அவசியம். விளையாட அனுமதிக்காததே இந்தக் குழந்தையின் தவறுக்கு காரணம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். திரும்ப கிடைக்காத அந்த அழகான பருவத்தை பெற்றோர்கள் பறித்துவிடக் கூடாது.

12 comments:

  1. ஆம்.  தாயின் மீதுதான் தவறு என்று தனக்கும் தோன்றுகிறது.  ஒரு வேற்றுமொழி காணொலி பார்த்தேன்.  அதில் ஒரு சிறுபெண் அழுகையுடன் விளையாட அனுமதிக்காதது பற்றி முறையிடுகிறார்.  அழிக்காமல் வைத்திருந்தால் உங்களுக்கு அதை பார்வேர்ட் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்கள்.

      Delete
  2. கலிகாலம்!  குழந்தைகள் பொய்ச்சொல்லாது என்கிற வார்த்தை பொய்யராகிறது. பொய்யோடு வஞ்சகமும் சேர்கிறது.  பாவம் அந்த ஸ்விக்கி ஆள்.  முன் ஜென்மத்தில் அவன் என்ன பாவம் செய்தானோ!

    ReplyDelete
    Replies
    1. இப்போதய குழந்தைகளிடம் கல்மிஷம் அதிகமாகத்தான் இருக்கிறது.

      Delete
  3. இப்படியொரு நிகழ்வு எனது வாழ்விலும் இருக்கிறது.

    அப்பா அடிப்பார் என்று பயந்து செல்போனை கீழே போட்டு உடைத்து விட்ட பையன் நான்தான் உடைத்தேன் என்று என்னை சொல்லி விட்டான்.

    நான் நடந்து போகும்போது அவனது கன்னத்தை செல்லமாக கிள்ளியதால் வந்த வினை.

    ReplyDelete
  4. நிச்சயமாகத் தாய், அதன் பின் தகப்பன் இருவரின் மீதுமான தவறுதான் இப்படிக் குழந்தைகள் பொய் சொல்லச் செய்கிறது. பெற்றோர் குழந்தைகளிடம் நட்பு ரீதியாக, குழந்தைகள் பெற்றோரிடம் பயம் இல்லாமல் எதையும் பகிர்ந்துகொள்ளலாம் என்ற ரீதியில் வளர்க்கப்பட வேண்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. /பெற்றோரிடம் பயம் இல்லாமல் எதையும் பகிர்ந்துகொள்ளலாம் என்ற ரீதியில் வளர்க்கப்பட வேண்டும்.// கரெக்ட்!

      Delete
  5. பாவம் அந்த டெலிவர் பாய். ஆனால் மற்றொன்றும் தோன்றியது. அங்கு சிசிடிவி காமரா இருக்கிறது. அப்ப அங்குள்ளவர்கள் முதலில் அதைச் செக் செய்திருக்க வேண்டும் என்றும் தோன்றியது. நம் குழந்தை சொல்கிறது என்று எப்போதுமே நாம் கண்மூடிக் கொண்டு நம்புவதும் கூடாது என்பதைப் பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவும் மற்றொருவர் மீது பழி சொல்லும் போது....ஏனென்றால் இதுவும் பெற்றோர் குழந்தைக்குக் கொடுக்கும் பாடம். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் முதலில் கற்பது.

    கீதா

    ReplyDelete
  6. காலம் கலியாயிடுத்து..

    அவ்ளோதான்!..

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    பதிவை படிக்கவே மனதுக்கு கஸ்டமாக உள்ளது.

    /குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். திரும்ப கிடைக்காத அந்த அழகான பருவத்தை பெற்றோர்கள் பறித்துவிடக் கூடாது./

    உண்மையான வார்த்தைகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய வழக்கமான பணியில் இல்லாமல் சுருக்கமாக இருக்கிறதே?

      Delete