விருத்தாசலம் விசிட்டும்,
மத்யமர் மீட்டும்
![]() |
| பிராது சீட்டுகள் கட்டப்பட்டிருக்கும் மரம் |
![]() |
| திருமுதுகுன்றம் கோவில் |
![]() |
| கண்டராதித்தன் கோபுரம் என்றதும் பொ.செ.தான் நினைவுக்கு வந்தது. |
![]() |
| ஆழ்ந்து பிள்ளையார் கோவில் |
விருத்தாசலம் விசிட்டும்,
மத்யமர் மீட்டும்
![]() |
| பிராது சீட்டுகள் கட்டப்பட்டிருக்கும் மரம் |
![]() |
| திருமுதுகுன்றம் கோவில் |
![]() |
| கண்டராதித்தன் கோபுரம் என்றதும் பொ.செ.தான் நினைவுக்கு வந்தது. |
![]() |
| ஆழ்ந்து பிள்ளையார் கோவில் |
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
நான் கனடா சென்று நாலாவது மாதத்தில் என் மகன் வயிற்று பேத்திக்கு ஆண்டு நிறைவு வந்ததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. குழந்தைக்கு முடி காணிக்கை கொடுப்பதற்காவது நான் வரும் வரை காத்திருக்க சொன்னேன்.
எங்கள் குடும்பத்தில் முதல் மொட்டை ஒரு குறிப்பிட்ட கோவிலில்தான் அடிக்க வேண்டும் என்னும் பழக்கம் கிடையாது. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு திருப்பதியில் முதலில் முடியிறக்கினோம். அதனால் பேத்திக்கும் அங்கேயே முடியிரக்கலாம் என்று தோன்றியது.
என் மகன் நான் அங்கிருக்கும் பொழுதே,"நீ இங்கே வந்தவுடன் திருப்பதி சென்று வந்து விடலாம், நாள் பார்த்து சொல் நான் புக் பண்ணி விடுகிறேன்" என்றான். ஆனால் நான் பார்த்து சொன்ன நாட்கள் அவர்களுக்கு அலுவலகத்தில் பிஸியான நாட்களாக இருந்தது.
புரட்டாசியில் முதல் மொட்டை அடிக்க மாட்டார்கள். பெண் குழந்தை என்பதால் செவ்வாய், வெள்ளி நோ! சனி,ஞாயிறில் திருப்பதியில் கும்பல் அதிகம் இருக்கும். மகனுக்கும், மருமகளுக்கும் அலுவலகத்தில் விடுமுறை எடுக்க முடிய வேண்டும், மருமகளின் மாதாந்திர அசௌகரியத்தை பார்க்க. வேண்டும். 21.8.22, திங்கள் கிழமை எல்லாவற்றிர்க்கும் ஈடு கொடுத்தது.
மகன் புக் செய்த டிராவல் ஏஜெண்ட் ஞாயிறு இரவு 11:45க்கு டயோட்டா இடியாஸ் காரில் எங்களை பிக் அப் செய்தார். விடியல் காலை 4:30க்கு கீழ் திருப்பதியில் ஒரு ஹோட்டலில் எங்களை இறக்கி விட்டு எங்களுக்கு குளித்து ரெடியாக ஒரு மணி நேரம் தந்தார்.
நாங்கள் நேராக மலையேறி, குழந்தைக்கு மொட்டை அடித்து, சுவாமி தரிசனத்தையும் முடித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் அலமேலுமங்காபுரம் சென்றோம். அங்கு அப்போது நடை அமைத்திருந்தார்கள். 7:30க்கு அஷ்ட தள பத்மார்ச்சனை சேவைக்கு ரூ.300க்கு டிக்கெட் வாங்கினால் அம்மனுக்கு முன்னால் உட்கார வைப்பார்கள் என்றதால் அந்த சேவைக்கான டிக்கெட் வாங்கி தரிசித்தோம்.
பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு மேலை சென்ற பொழுது 10:30 ஆகி விட்டது. அங்கே கும்பலான கும்பல். குழந்தைக்கு மொட்டை அடித்துக் கொண்டு வருவதற்கு 12 மணியாகி விட்டது. பின்னர் முன்னூறு ரூபாய் டிக்கெட் வரிசை துவங்கும் இடத்தில் எங்களை இறக்கி விட்டார்.
செல்ஃபோன் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஸ்மார்ட் வாட்சிற்கும் அனுமதி இல்லை என்பதை முன்னரே கூறி விட்டதால் என் மகன், மருமகள் இருவரும் தங்கள் ஸ்மார்ட் வாட்சுகளை கட்டிக்கொண்டு வரவில்லை. ஆனால் மெட்டல் ஸ்டார்ப் வாட்சுகளுக்கும் அனுமதி இல்லை என்றார்கள். அதனால் எங்கள் கை கடிகாரங்களை காரிலேயே வைத்தோம்.
அதே போல் டிரஸ் கோடும் கொடுத்திருந்தார்கள். ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை அல்லது அங்கவஸ்திரம், பெண்கள் என்றால் புடவை அல்லது துப்பட்டாவோடு சூடிதார். என் மருமகள் துப்பட்டாவை மறந்து விட்டாள். மறுபடியும் காருக்குச் சென்று எடுத்து வர வேண்டுமோ? என்று திகைத்தோம். வாயில் காப்பானாகிய பெண், "இங்கே கடையிலேயே, துப்பட்டா விற்கிறார்கள், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள். அங்கிருந்த கடைகளில் கலர் கலராக துப்பட்டாக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒன்று வாங்கிக் கொண்டாள். நல்ல வியாபாரம்! நாங்கள் ஆளுக்கு ஒரு மாஸா குடித்து விட்டு, நடந்து, நடந்து ஒரு ஹாலை அடைந்து, அங்கு எங்கள் அடையாள அட்டை, டிக்கெட் காண்பித்து மீண்டும் நடந்துட நடந்து நடந்து 26ம் எண் கூண்டில் சென்று அமர்ந்து பொழுது மணி ஒன்று. பசி மற்றும் நெரிசலில் அழத்தொடங்கிய குழந்தைக்கு செரிலாக் கொடுக்கலாம் என்று அங்கிருந்த பொருள்களை ஸ்கேன் செய்யும் இடத்திற்கு அருகில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம், அப்போது அங்கு வந்த ஒரு அதிகாரி," இங்கு உட்காரக் கூடாது என்று விரட்டினார். வரிசையில் எங்களுக்குப் பின்னால் இருந்த பெண்மணி, இரண்டு பிஸ்கெட்டுகளைத் தந்தார். அதை சாப்பிட்ட குழந்தை உறங்கியது.
திருப்பதி சந்திரனுக்கு உரிய தலம் என்பதால் அங்கு திங்கள் கிழமை செல்வது விசேஷம், அதோடு ஏகாதசியும் சேர்ந்து கொண்டதாலோ என்னவோ கும்பல் கொஞ்சம் அதிகம்தான். எப்படியோ பெருமாளை சேவித்து வெளியே வந்த பொழுது மணி நான்கு. மலை மேல் இருந்த உணவகங்களில் சாப்பாட்டு கடை முடிந்து விட்டது. "கீழே ஹோட்டல் மயூராவிற்குச் செல்லுங்கள், டிபன் கிடைக்கும் என்றேன்". மயூராவின் டொமாடோ ஆம்லெட்டிற்கு மனம் ஏங்கியது. ஆனால் அந்த டிரைவரோ," போகும் வழியில் ஹை வேயில் நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றார்.
கீழே இறங்கும் பொழுதே நான் உறங்க ஆரம்பித்து விட்டேன். ஹை வேயில் சரவணபவனில் சப்பாத்தி சாப்பிட்டு விட்டு மீண்டும் நல்ல உறக்கம். வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு மணி பதினொன்று. எப்போதாவது புயல் அடிக்கும் ஒரு நாள் திருப்பதி சென்றால் நல்ல தரிசனம் கிட்டலாம். முன்பெல்லாம் ஒரு முன்னூறு ரூபாய் டிக்கெட்டிற்கு இரண்டு லட்டுகள் தருவார்கள். இப்போது ஒரு டிக்கெட்டிற்கு ஒரு லட்டுதான், அதுவும் அளவும் குறைந்து விட்டது. சுவை? அது குறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதே.
சரி, தலைப்பை நியாயப்படுத்தவே இல்லையே? என்கிறீர்களா? இதோ வந்து விட்டேன்.
பெரிய பணக்காரர்கள் ஆடம்பரமாக செய்யும் பூஜையில் படைக்கப்படும் உயர் ரக உணவை ஏற்காமல் அருகில் ஒரு ஏழை படைக்கும் கூழை விரும்பி கடவுள் உண்பதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம், கதைகள் படித்திருக்கிறோம். மகாபாரதத்தில் கூட துரியோதனின் அரண்மனையை தவிர்த்து விட்டு, விதுரரின் வீட்டில்தான் கிருஷ்ணர் தங்கியதாக வரும்.
எங்கள் வீட்டில் என் மருமகள் தன் குழந்தைக்கு சிறந்த உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லோரிடமும் விசாரித்து, யூ டியூபில் தேடி பார்த்து பார்த்து தயாரித்து கொடுக்கும் உணவை என் பேத்தியை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஆனால் அதை பார்த்துக் கொள்ள வரும் பெண்மணி கொண்டு வரும் உணவை, "ஐயோ இது பேடா, இது காரா.." என்று அந்தப் பெண்மணி தடுத்தாலும் எந்த பிகுவும் இல்லாமல் எடுத்து உண்கிறது.
மறக்க முடியாத வசனங்கள்.
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா,பாட்டி, சின்ன தாத்தா, சின்ன பாட்டி, அத்தை பாட்டி, அத்தை என்று நிறைய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் பேசும் பொழுது நிறைய பழமொழிகளை கூறுவார்கள். அவற்றை வசனங்கள் என்பார்கள். அதாவது இப்போதய பஞ்ச் டயலாக் போல. பேச்சு வழக்கில் போகிற போக்கில் இந்த வசனங்கள் தெறித்து வரும். பல வசனங்கள் அர்த்தத்தோடும், நகைச்சுவையோடும், சில அடல்ட் ஜோக் வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கும்.
பிரமிக்க வைத்த நயாகரா
நயாகரா பெண்ணைப்போல, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு! என்றார் என் மாப்பிள்ளையின் தோழர். உண்மைதான். குளிர் காலத்தில் இரண்டு முறை அங்கு சென்றேன். கிருஸ்துமஸ் சமயத்தில் அங்கு செய்யப்பட்டிருக்கும் விளக்கொளி அலங்காரங்களையும், வாண வேடிக்கைகளையும் பார்ப்பதற்காக இரவில் ஒரு முறை சென்றோம். பகலில்தான் அருவியின் அழகு தெரியும் என்றாள் என் மகள். அதை ரசிப்பதற்காக பகலில் ஒரு முறை சென்றோம்.
வாண வேடிக்கைகள் பிரமாதம் என்று கூற முடியாது. தீபாவளியின் பொழுது நாம் வெடிக்கும் ஃபேன்ஸி வெடிகள் மாதிரிதான். அதே போல் அருவியும் பெரிதாக என்னை வசீகரிக்கவில்லை. அருவி தொடங்கும் இடத்திலிருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம்.
நீர்வீழ்ச்சி என்றால் மலையிலிருந்து தொபேலென்று கீழே விழ வேண்டும், ஹோவென்ற ஓசை எழுப்ப வேண்டும். நீர்த்திவலைகள் சாரலாக நம்மை நனைக்க வேண்டும். இந்த அனுபவங்களைத் தராத அருவியில் என்னதான் வினாடிக்கு 2800க்யூபிக் மீட்டர் நீர் கொட்டினாலும் அது மலையிலிருந்து நீர் வழிவதாகத்தான் தோன்றுகிறதே ஒழிய குற்றாலமோ, பாபநாசமோ தந்த சந்தோஷத்தை தரவில்லை என்று நான் கூறி விட்டதில் என் மகளுக்கு சற்று வருத்தம்தான்.
மேலே நான் சொன்ன அனுபவங்கள் கிடைக்காததற்கு குளிர் காலத்தில் நயாகராவுக்கு சென்றது ஒரு காரணமாக இருக்கலாம். "குளிருக்கு அடக்கமாக லேயர்கள் அணிந்து கொண்டு அதன் மீது ஓவர் கோட், தலைக்கு குல்லாய், கால்களில் கம்பூட்ஸ், காதுகளையும் மூடிக்கொண்டு, இத்தனையும்
போதாதென்று கொரோனாவிற்காக மாஸ்க்...இத்தனையையும் மீறி சாரல் அடிக்கவில்லை, சத்தம்
கேட்கவில்லை என்றெல்லாம் சொல்வது நியாயம் கிடையாது. சம்மர் வரட்டும் அப்போது நயாகராவுக்குச் செல்லலாம்" என்றாள் மகள்.
சனி, ஞாயிறு என்றால் மிகவும் கும்பலாக இருக்கும் என்பதால் வெள்ளியன்று கிளம்பினோம். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நயாகராவிற்கு இரண்டு மணி நேர பயணம். காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விட்டோம். அதற்கு முன்னாலேயே பார்க்கிங் உட்பட போட்டிங், ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ், வொயிட் வாட்டர் வாக், ஃப்ளவர் ஷோ, பட்டர் ஃப்ளை சாங்சுரி என்ற எல்லாவற்றிர்க்கும் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியாகி விட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் வரிசைதான் நீளமாக இருந்தது. நேரிடையாக வந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் காத்திருக்க தேவையிருக்கவில்லை.
![]() |
| Rainbow bridge |
நயாகரா நீர்வீழ்ச்சியை கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகளிலிருந்தும் கண்டு ரசிக்கலாம். உண்மையில் நயாகரா அருவி என்பது நோ மேன்ஸ் ஏரியா எனப்படுகிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ ப்ரிட்ஜ் என்னும் பாலம் இணைக்கிறது. அமெரிக்காவில் இருப்பது பிரைடல் ஃபால்ஸ் என்னும் அளவில் கொஞ்சம் சிறிய அருவி. கனடாவில்தான் ஹார்ஸ் ஷு என்னும் குதிரை லாடத்தைப்போல
வளைந்திருக்கும் பெரிய பகுதி. இதற்கு அருகாமை வரை சிறிய கப்பலில் செல்ல முடியும்.
அந்த கப்பலில் பயணிக்கும் பொழுது அருவியிலிருந்து அடிக்கும் சாரலில் நாம் நனைந்து விடாதிருக்க சிவப்பு நிறத்தில் மெல்லிய ரெயின் கோட் தருகிறார்கள். கனடாவிற்கு நேர் எதிர் பகுதியில் அமெரிக்காவிலிருந்தும் சிறிய கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் நீல நிற ரெயின்கோட் அணிந்திருக்கிறார்கள். படகு பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கவே இப்படி வித்தியாசமான நிறங்களில் ரெயின் கோட் வழங்கும் ஏற்பாடாம்.
கப்பல் நகரத் தொடங்கி சிறிது நேரத்தில் ஹோவென்ற பேரிரைச்சலோடு தண்ணீர் நம்மீது தெளிக்கிறது, இல்லையில்லை பலத்த மழை போல நம்மை தொப்பலாக நனைக்கிறது. படகில் இருக்கும் அத்தனை பேரும் மகிழ்ச்சியில் உற்சாகமாக ஆரவாரம் செய்கிறார்கள். நடுவில் வானவில் வேறு தெரிய அதை படமெடுக்க போட்டி.
ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ் என்பதும் ஒரு அற்புதமான அனுபவம். நுழைவிடத்திலிருந்து நம்மை மின்தூக்கியில் 125 அடி கீழே அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து ஒரு நீண்ட குகையில் நடந்து சென்றால் நயாகரா பூமியில் விழுவதை அருவிக்கு பின்புறமிருந்து பார்க்கலாம்.
அந்த குகையில் கொஞ்சம் நடந்தால் வலதுபுறம் ஒரு பிரிவு செல்கிறது. அங்கு நயாகரா பற்றிய விவரங்கள், நயாகராவில் சாகஸ முயற்சிகள் செய்தவர்களின் விவரங்கள், அங்கு விஜயம் செய்த பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் புகைப்படங்களோடு காணக்கிடைக்கின்றன. அங்கு இரண்டு சாளரங்கள் வழியே அருவியை அருகில் பார்க்க முடியும். கையை நீட்டி மழை போல கொட்டும் அருவியின் சாரலை அனுபவிக்க முடியும். அங்கிருந்து மீண்டும் டன்னலில் நடந்து அருவி பூமியைத் தொடும் இடத்திற்கு வந்தால் பார்வையாளர்களுக்கு தனியாக இடம் இருக்கிறது. இங்கேயும் சாரலிலிருந்து நம்மை காக்க ரெயின் கோட் தருகிறார்கள்.அங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த அருவியின் பிரும்மாண்டம் தெரிகிறது.
அருவி தந்த அந்த பரவச அனுபவத்திலிருந்து மீண்டு வொயிட் வாட்டர் வாக்ஸ் சென்றோம். ஈரி ஏரியிலிருந்து ஒண்டோரியோ ஏரிக்கு செல்லும் நீர்த்தடத்தை ஒட்டிய மரப்பாலத்தில் .07 மைல் தொலைவு நடப்பதைத்தான் வொயிட் வாட்டர் வாக்ஸ் என்கிறார்கள். இதிலும் நாம் லிஃப்டில் கீழே அழைத்துச் செல்லப்படுகிறோம். அந்த மரப்பாலத்தில் இரண்டு இடங்களில் சற்று கீழே இறங்கி நதியோட்டத்தை மிக அருகில் பார்க்க முடியும். அந்த நதியோட்டத்தில் எழும் அலைகள் நதியின் வேகத்தால் எழுபவை. ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் கங்கை நதியில் இப்படிப்பட்ட அலைகளை பார்க்க முடியும்.
வேர்ல்பூல் ஏரோ கார் என்பதில் 250 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணித்து ஒரு குறுகலான இடத்தில் சடாரென திரும்பும் பொழுது நதியில் உண்டாகும் சுழல் களை ரசிப்பது. இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கனடாவிலிருந்து பாஸ்போர்ட் இல்லாமலேயே அமெரிக்காவின் எல்லைக்குள் சென்று திரும்பலாம்.
மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவம்.
"இப்போது என்ன சொல்கிறாய்?" என்றாள் மகள். என்ன சொல்வது அருவியின் பிரும்மாண்டம், அழகு, என் வாயை அடைத்து விட்டதே..!!
வாஷி
(மலையாள திரைப்படம்)
கெட்ட சொப்பனம்..
பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ரிலீசாகி விட்டது. திரையரங்குகளில் ஒரே கும்பல். முதல் காட்சியை என் மகள் என் சகோதரி குடும்பத்தோடு பார்த்து விட்டாள். "என்னை விட்டு விட்டு நீ மட்டும் பார்த்து விட்டாய்" என்று அவளிடம் கூறி விட்டு நான் வரிசையில் நிற்கச் செல்கிறேன். என்னோடு பாம்பே ஜெயஶ்ரீ இணைந்து கொள்கிறார். தியேட்டரில் உள்ளே வருபவர்களுக்கெல்லாம் வாழை மட்டை தட்டில் பொங்கல் தருகிறார்கள். இந்த நேரத்தில் பாம்பே ஜெயஶ்ரீ எங்கேயோ சென்று விடுகிறார்.
நான் படம் பார்த்து விட்டு Awesome என்ற ஒரே வார்த்தையை பெரிதாக என் பிளாகில் விமர்சனமாக எழுதுகிறேன். அதற்கு பின்னூட்டத்தில் ஸ்ரீராம், "அதற்குள் பார்த்து விட்டீர்களா? ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவா?" என்று கேட்கிறார். கீதா அக்கா,"நிஜமாக வா..? நன்றாக இருக்கிறதா?" என்கிறார். எனக்கு திடீரென நாம் நிஜமாகவே படத்தை பார்த்தோமா? பாதியில் தூங்கி விட்டோம் போலிருக்கிறதே..? இதில் விமர்சனம் வேறு எழுதி விட்டோம் என்று சந்தேகம் வருகிறது. புரண்டு படுத்து முழித்துக் கொண்டு விட்டேன்.
நேற்று பொன்னியின் செல்வன் -1 டீசர் பார்த்தேன். அதற்கு இப்படி ஒரு விளைவா? சின்ன வயதில் ராத்திரி நேரத்தில் பேய்க்கதைகளை படிக்க க் கூடாது கெட்ட சொப்பனம் வரும் என்பார்கள்.
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.
சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா?
"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true!
இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்
"நன்மை என்பதும், தீமை என்பதும்
நாமணிந்திடும் வேடமே இதில்
வெல்வதென்னடி, தோல்வி என்னடி
மேடையில் ஒர் விளையாடலில் நாம்
மேடையில் விளையாடலில்"
என்னும் வரிகளை மறக்கவே
முடியாது.
ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில்
"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும்.
அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை
'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?
சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில்
"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்
பொய் சொல்லாதே
பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"
எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.
தி.ஜானகிராமன் மோகமுள் கதையை
"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை"
என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?
அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில்
'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'
என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.
சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.
எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்
"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.
மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,
"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை "
எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்!
கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.
Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம்
சோஷியல் மீடியா என்பது விரல் நுனியில் இருக்கும் விபரீதம். இதை Zee5 ல் வெளியாகியிருக்கும் ஃபிங்கர்டிப் என்னும் வெப்சீரீஸ் அலசியிருக்கிறது.
சீசன் ஒன்றில் ஐந்து வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க, சோஷியல் மீடியாவிற்கு அடிமையானவர்கள், நல்லவர்கள், அப்பாவிகள், இவர்களை சோஷியல் மீடியா எப்படி பாதிக்கிறது என்று சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் தலைப்புகள் Greed, Rage, Betrayal, Lust, Vengeance என்று ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிட சௌகரியமாக இருக்கும் என்பதாலோ?
சீசன் இரண்டு ப்ளாக் வெப்(black web) என்னும் பயங்கரத்தை டீல் பண்ணுகிறது.
தங்கள் செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மக் பண்ணி, அவர்களை விரட்டுபவன், மார்பிங் மூலம் பிரபலங்களின் பொது வாழ்வை சீர் குலைப்பவன், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஃபுட் டெலிவரி செய்பவன், காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை திருத்திக் கொள்ள நினைக்கும் நடிகை, எக்லிப்ஸ் என்னும் எதிக்கல் ஹாக்கர், சி.சி.டி.வி.காமிரா பொருத்த வருபவர்கள் போல வந்து தனிமையில் இருக்கும் முதியவர்களை கொலை செய்யும் ஒரு கும்பல், அதை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இப்படி தனித் தனியாக இருக்கும் கதைகள் ஒரு புள்ளியில் அழகாக இணைகின்றன. இதில் அந்த நடிகையின் கதை மட்டும் கொஞ்சம் ஒட்டாது போல இருக்கிறது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மார்பிங் செய்யும் அந்த இளைஞர், சரியான வில்லன். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஷிவகரை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
விக்ரம்
நானும் விக்ரம் பார்த்து விட்டேன். இந்த படத்தைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தன.
![]() |
| மாண்ட்ரியால் டவர் |
கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!
![]() |
| முதல் படத்தில் தெரிவது மியூசியம் |
![]() |
| அலெக்ஸாண்ட்ரா பாலத்தை கையில் அடக்குவதை போல என் மகள் எடுத்த படம் |
⁰![]() |
| ஹோட்டலிலிருந்து வியூ |
![]() |
| இதுதான் அருவியாம் |